Airtel, Zomato & TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம் இதுதான்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது ஊழியர்களை மீண்டுமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை தொடர அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
WHF முறை
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா என்ற பேரலை தொற்றுக்கு மத்தியில் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டு, ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி அளித்தது. அந்த வகையில் 2020ம் ஆண்டு முதல் இப்போது வரையும் பல்வேறு நிறுவனங்களில் இந்த WHF முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் பாதிப்புகள் கணிசமாக குறைந்த நிலையில் அரசாங்கம் நோய்த்தடுப்பு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த முடிவு செய்தது.
கொரோனா பரவலால் ஊரடங்கு அச்சம் – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
இதனால் மக்கள் மெது மெதுவாக தங்களது இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தனர். அதே போல, நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான WHF முறையை முடித்து விட்டு அலுவலகங்களுக்கு திரும்பி அழைக்கத் துவங்கியது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்தியாவில் கொரோனா பரவல் பாதிப்புகள் மீண்டுமாக துளிர்விட துவங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு WFH முறையை தொடரும்படி பணியாளர்களுக்கு வலியுறுத்தி இருக்கின்றது.
ExamsDaily Mobile App Download
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு WFH முறைக்கு தயாராகும் படி தனது ஊழியர்களை சொமேட்டோ நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது. தவிர நெஸ்ட்லே, TCS, இன்போசிஸ் உள்ளிட்ட IT நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களில் ஹைப்ரிட் வொர்க் மாடலை தொடருவது குறித்தும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.