கொரோனா பரவலால் ஊரடங்கு அச்சம் – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா நான்காம் அலை துவங்கியுள்ளது. அதிலும், சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவலால் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், அப்படி செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது.
திருப்பதி செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்கள் விநியோகம்!
இந்த கட்டுபாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்தது. மக்கள் சுதந்திரமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடமாடத் துவங்கினர். இந்நிலையில் மீண்டும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா நான்காம் அலை தொடங்கி விட்டதோ என மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. வூஹான் நகரில் மட்டுமே இதுவரை 333 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதாவது நாட்டு மக்கள் தொகையில் 88.3 சதவீதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.
ExamsDaily Mobile App Download
அதிலும் குறிப்பாக சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காயில் வைரஸ் அதிகமாக உள்ளது. ஹாங்காங் நகரில் ஒரு நாளைக்கு மட்டும் 2500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளி இடங்களுக்கு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இரும்பு தடுப்புகள் மூலமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்ஜிங்கில் ஊரடங்கை அமல் செய்யப்படலாம் என மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் பெய்ஜிங் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே போகாத முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.