வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம், பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்கவும், பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா நோய் தொற்று நிலைமையை ஆய்வு செய்த ராஜஸ்தான் அரசாங்கம், வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவின்படி, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருக்காது. மேலும், நகரங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை பிப்ரவரி 1 முதல் திறக்கவும், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதனுடன் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் தினமும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தினசரி இரவு ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். அதே வேளையில் ஜனவரி 31 முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டம் முடிவடையும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!
இதற்கிடையில் பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், நிகழ்ச்சிகளின் போது அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளில் கூடும் நபர்களின் அதிகபட்ச வரம்பு 100 ஆக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது மாநில அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் நாளை (ஜன.31) முதல் அமலுக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.