10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
10 & 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்.1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கோவிட் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் முழுவதும் அனைத்து மட்டங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அபய் குமார் அவர்கள் மாநிலம் முழுவத்திற்குமான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதன்படி, பெற்றோர்களின் அனுமதி கடிதத்தை பெற்று வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு நேரடியாக நடத்தப்படும் வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

IPL 2022: டாப் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை குறிவைத்துள்ள டெல்லி அணி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அரசு புதிதாக அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி ஜனவரி 31 ஆம் தேதிக்குப் பிறகு, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நபர்களின் எண்ணிக்கையை நிறுவனங்களின் உரியமையாளர்கள் மற்றும் அலுவலக தலைமை அதிகாரிகள் அரசிடம் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் ஜனவரி 31 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி – மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!

மேலும், ராஜஸ்தானில் பிப்ரவரி 1 முதல் 10-12 ஆம் வகுப்புக்கும், பிப்ரவரி 10 முதல் 6-9 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு வெள்ளிக்கிழமையான நேற்று அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்களுக்கு வருகை பதிவு கட்டாயம் இல்லை என்றும், ஆன்லைன் வகுப்புகளில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை பொது ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில், சந்தைகள், மாநிலத்தின் பிற வணிக நிறுவனங்கள், இப்போது இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!