தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு கிடையாது? ஆன்லைன் தேர்வுகள்! அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வை எழுதலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்வு நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 2021 – 2022 ம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி விட்டு தேர்வுகளை மட்டும் நேரடி முறையில் நடத்துவது சரியில்லை அதனால் மீண்டும் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் மூன்றாம் அலை பரவ தொடங்கியது.

பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் தான் பணி – மாநில காவல்துறை இயக்குநர் அறிவிப்பு!

அதனால் அரசு தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனை தொடந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொற்று பேரால் அதிகரித்து வந்ததால் மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. இந்த நிலையில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த சிக்கல் எழுந்தது. அதனால் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி 19 முதல் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தேர்தல் எதிரொலி!

தற்போது அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்தால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வை எழுதலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம். தேர்வை தவிர்த்து மற்ற நாட்கள் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் ஆன்லைன் தேர்வில் எவ்வித முறைகேடுகளையும் செய்யாமல் சிறப்பாக எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!