வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? மாநில அரசு ஆலோசனை!
கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முன்னதாக விதிக்கப்பட்டிருந்த வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து அதிக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
வார இறுதி ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் சில வாரங்களுக்கு முன்பிருந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பரவல் முதலில் கர்நாடக மாநிலத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்து தீவிர நடவடிக்கை நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 28 முதல் இரவு ஊரடங்கு உத்தரவையும், ஜனவரி 7 முதல் வார இறுதி ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. அந்த அறிவிப்பின் படி ஜனவரி 19ம் தேதி வரை வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்தது.
CBSE 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அறிவியல் சவால் போட்டி!
வணிக சமூகம் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் மக்கள், அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வார இறுதி ஊரடங்கு உத்தரவை கடுமையாக எதிர்த்தனர். ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் இரவு ஊரடங்கு உத்தரவை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதாவது இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 11 மணி முதல் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக கடந்த வாரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநில முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர். மேலும், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போன்றவர்கள் அரசின் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
இந்திலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமையான நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, கொரோனா 3ம் அலையின் தீவிரம் தற்போது குறைந்து உள்ளதால் மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கொரோனா நோய் தடுப்பு முறைகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் கருதுகின்றனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தேவையற்றவை. தற்போது நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 95% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
தற்போதைய இந்த நிலையை மருத்துவ நிபுணர்களிடம் தெரிவிக்க உள்ளதாகவும், ஆலோசனையின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைத் தொடரலாமா என்பதை அரசு முடிவெடுக்கும் என்றும் கூறினார். முதல்வர் வெள்ளிக்கிழமையான நாளை கோவிட்-19 பணிக்குழு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். அதன் இறுதியில் அரசின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.