வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
சண்டிகர் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற அனைத்து நாட்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவானது இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு ரத்து
கொரோனா 2 ஆம் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக சண்டிகர் மாநிலத்தில் மே மாத துவக்கத்தில் இருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்து ஜூன் 28 ஆம் தேதிக்கு மேல் இரவு நேர ஊரடங்கு உத்தரவாக அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் சண்டிகர் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவானது ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் தளர்த்தப்பட்டு வந்தது.
சர்வதேச விமான சேவைகளுக்கு தடை – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
முன்னதாக மாநிலம் தழுவிய இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் சண்டிகர் மாநிலம் மொஹாலியில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த புதிய அறிவிப்புகளின் படி,
- அனைத்து கடைகள் மற்றும் உணவகங்களும் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம்.
- இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடரும்.
TN Job “FB Group” Join Now
- பார்கள், பப்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருந்தால், 50% இருக்கைகளுடன் இவற்றை மீண்டுமாக திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
- பல்கலைக்கழகங்கள், மேம்பாட்டு மையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.