சர்வதேச விமான சேவைகளுக்கு தடை – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 14 நாடுகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்கங்களுக்கு தடை:
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளும் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு நோய் தடுப்பு பற்றிய அறிவுரைகளை வழங்கி வருகிறது. நோய் பரவல் தடுக்கும் நடவடிக்கையாக பேருந்து சேவை, ரயில் சேவை போன்றவை இயங்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகள் விமான சேவைகளையும் ரத்து செய்தது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று – அமைச்சர் தகவல்!
மற்ற நாடுகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக 14 நாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் மூலம் நோய் பரவும் அபாயம் நிலவுவதால் லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் விமானம் செல்லவும், அந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதையும் அமீரகம் ரத்து செய்துள்ளது. இந்த தடை உத்தரவு ஜூலை 21ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் சரக்கு விமானப் போக்குவரத்து, வர்த்தக ரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்களுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி அமீரக அரசு விலக்கு அளித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரக மக்கள் உரிய அனுமதி பெற்று, மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து சிகிச்சை பெறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.