தமிழக மக்களே கவனம்…இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
தமிழக மக்களே கவனம்...இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்...இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தமிழக மக்களே கவனம்…இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ள நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து தற்போது பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில், இன்றும், நாளையும்  தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த முக்கிய தகவல் – BCI அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

இதே போல் இன்றும் நாளையும் வட தமிழக உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்துற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று மற்றும் நாளையும் மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!