அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த முக்கிய தகவல் – BCI அறிவிப்பு!!

0
அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த முக்கிய தகவல் - BCI அறிவிப்பு!!
அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த முக்கிய தகவல் - BCI அறிவிப்பு!!
அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த முக்கிய தகவல் – BCI அறிவிப்பு!!

அகில இந்திய பார் தேர்வு வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் (BCI), டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அகில இந்திய பார் தேர்வு:

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றங்களில் பயிற்சி பெறுவதற்கு அகில இந்திய பார் தேர்வில் (AIBE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஒரு வழக்கறிஞர் நீதிமன்றங்களில் 2 ஆண்டுகள் வரை தற்காலிகமாக பயிற்சி செய்யலாம். இந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாயமாக AIBE தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

MBA முடித்தவரா? டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காத்திருக்கும் பணிவாய்ப்பு!

Follow our Instagram for more Latest Updates

ஆனால் 2021ம் ஆண்டுக்கு பிறகு AIBE தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி பெற சேர்ந்துள்ளார். மேலும் அவர் இதுவரை AIBE தேர்வு நடத்தப்படாமல் இத்தேர்வை இயலவில்லை எனவும் அதனால் தான் பயிற்சி பெறுவதை தடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, AIBE தேர்வு நடத்தப்படாமல் உள்ளதால் வழக்கறிஞர் பயிற்சி பெறுவதை தடுக்க முடியாது. அத்துடன் AIBE தேர்வு எப்போது நடத்தப்பட வேண்டும் என அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது AIBE தேர்வு வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என BCI தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!