தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன்‌ கூடிய கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன்‌ கூடிய கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன்‌ கூடிய கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன்‌ கூடிய கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மாற்று புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

நேற்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்‌திய பகுதி மற்றும்‌ பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும்‌ தமிழக கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில்‌ நகரக்கூடும்‌.

TNPSC 5000+ காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு!

03.03.2022: கடலோர தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு இல இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

04.03.2022: கடலோர தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌ தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.03.2022: கடலோர தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்பு உள்ளது.

யார் இந்த ‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ்? அவரை பற்றிய ஸ்வாரசியமான தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!

06.03.2022: கடலோர மாவட்டங்கள்‌ புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. கடலார்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, செங்கல்பட்டு, காஞ்‌சிபுரம்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

07.03.2022: தமிழ்நாடு மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வட உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமமை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல பகுதிகளில்‌ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொழிற்கல்வி பாட தேர்வு விளக்கம்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

03.03.2022,: தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்‌திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தமிழக கடலோரப்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே மணிக்கு 6௦ கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

04.03.2022: தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதி, வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே மணிக்கு 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

05.03.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே மணிக்கு 6௦ கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

06.03.2022: வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடைஇடையே மணிக்கு 6௦ கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும்‌, ஆழ்கடல்‌ பகுதிகளில்‌ உள்ள மீனவர்கள்‌ உடனே கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!