தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – ‘இதனை’ செய்யாவிடில் அபராதம்!
தமிழகத்தில் அவவ்போது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து தற்போது நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம்பர் பிளேட்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டும் நபர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதாவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யயும் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, பைக் சாகசங்களை மேற்கொள்கின்றனர். அத்துடன் போலி நம்பர் பிளேட்களையும் சிலர் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தவறு செய்த நபர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. மேலும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களிடையே புகார்கள் பெறப்பட்டது.
அதனால் இது குறித்து போலீசார் 4 நாட்கள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டின்றி ஏராளமான வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி வந்தாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக 4 நாட்களில் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டின்றி இனிமேல் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தற்போது போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து இது தொடர்பாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட்டின்றி யாரேனும் வாகனங்கள் ஓட்டுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் சென்னையில் நம்பர் பிளேட்டின்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் செயின் பறிப்பு, பைக் சாகசங்கள், கஞ்சா விற்பனை உள்ளிட்டவை நடைபெறுவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்