தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து உள்ளவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் முக்கிய எச்சரிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கை குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழ் நாடு அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை மையமாக வைத்து தமிழக அரசு நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்திய அரசு. அதன் படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
WhatsApp பயனர்களா நீங்கள்? பணம் செலுத்துதல் & பரிமாற்றத்தில் கேஷ்பேக்! புதிய அறிமுகம்!
இந்த நிலையில் ரேஷன் கார்டு வைக்க தகுதியானவர்கள் யார் யார் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது என்னவென்றால், தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக செல்வதை தடுக்க உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக அவர்களின் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும் 100 சதுர சிட்க்கு மேல் நிலம், வீடு, பிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல், நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ஆகியோர் சரண்டர் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.