நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது.
வாக்காளர் விவரங்கள்:
நாடாளுமன்றத்தில் மக்களவையின் 543 தொகுதிகளுக்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதி உடன் முடிவடைய உ ள்ளது. இதனை ஒட்டி 18-வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் பின்னர் ஜூன் 4-ம் தேதி அன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு அனைத்து வழிமுறைகளையும் எளிதாக்கியுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குச்சாவடி மையம் போன்ற விவரங்களை வாக்காளர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இணையதளங்களில் இந்த விவரங்கள் அனைத்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
UPSC ஆணையத்தில் 140+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!
அதன்படி வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சோதிக்க https://electoralsearch.eci.gov.in/ என்ற தளத்தை அணுக வேண்டும். இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பெயருடன் பிறந்த தேதி, தொகுதி அல்லது செல்போன் நம்பர் மூலம் சோதனை மேற்கொள்ள முடியும். இதே போல் வாக்கு சாவடி மையத்தை பற்றி தெரிந்து கொள்ள https://electoralsearch.eci.gov.in/pollingstation இணையதள பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்னை பதிவு செய்தால் உங்களின் வாக்கு சாவடி மையம் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.