தமிழகத்தில் வேலூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளார்.
தீவிர பிரச்சாரம்:
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரங்களை அதி தீவிரமாக நடத்தி வருகின்றன. இன்னும் தேர்தலுக்கு பத்து நாட்களே உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தங்களின் தேசிய கட்சி கூட்டணியை தமிழகத்தில் நிலைநாட்ட அதிக முயற்சி எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து தற்போது வேலூர் கோட்டைக்கு வந்துள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
அதில் அவர் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் வளர்ந்த இந்தியாவை தமிழ்நாடு வழி நடத்தும் நேரம் எது என பேசி தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மிகவும் பலவீன நாடாக இந்தியா இருந்தது, தற்போது பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பெரிது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிக பலமான நாடாக மாறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உதான் திட்டத்தின் கீழ் விரைவில் வேலூர் விமான நிலைய பணி விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.