தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – இன்று முதல் துவக்கம்!

0
தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு - இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – இன்று முதல் துவக்கம்!

இந்தியாவில் முக்கிய குடியுரிமை ஆவணமான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் இன்று முதல் மேற் கொண்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் அனைவருக்கும் படிவம் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் கார்டு:

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் முன் கூட்டியே அதாவது 17 வயது பூர்த்தி அடைந்தவுடன் வாக்காளர் அட்டையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள், அலுவலர்கள் இளைஞர்கள் விண்ணப்பிக்க ஏற்றவாறு தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் எளிய முறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் இருந்த நிலையில் தற்போது மேலும் 3 தேதிகளில் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம் – ஒன்றிய அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்திலும் இதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 6பி என்ற படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவத்தை அளிக்க உள்ளனர். இந்த படிவத்தில் ஆதார் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இதனை சரியாக பூர்த்தி செய்து அதிகாரியிடம் வழங்க வேண்டும். பிறகு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். தற்போது ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்படுவதன் மூலம் போலி வாக்காளர்கள் உருவத்தை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்களுக்கு மொபைல் போன் வழியாக அனுப்புவதற்கு இந்த இணைப்பு பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!