“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய பின் விஜே தீபிகாவின் தற்போதைய நிலை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜே தீபிகா. அவர் சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஏகப்பட்ட சீரியல்கள் மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக அதில் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். மேலும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்களிடம் பிரபலமாகிவிடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.
இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்தே கதை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பாசத்தில் விரிசல் ஏற்படுத்தி கதையில் மாற்றத்தை கொண்டு வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முன்னதாக விஜே தீபிகா நடித்து வந்தார். திருநெல்வேலி அருகே சிறிய கிராமத்தில் இருந்து வந்த அவர், நடிப்பு மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். அங்கே ஏகப்பட்ட கஷ்டங்களை தாண்டி அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
புது வீட்டில் குடியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – சீரியலில் அடுத்த திருப்பம்!
ஆனால் அவருக்கு சில மாதங்களில் முகப்பரு பிரச்சனை அதிகமாக வந்ததால் சீரியலில் இருந்து அவர் விலகினார். அதன் பின் சில தனியார் யூடுப் சேனல்களின் பேட்டிகளில் அவரை பார்க்க முடிந்தது. அதில் தனக்கு பணக் கஷ்டம் அதிகமாக இருப்பதாகவும், சென்னையில் தனியாக வீடு எடுத்து என்னுடைய அப்பா அம்மாவை வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதெல்லாம் முடியாமல் போனதாக வருத்தப்பட்டு சொல்லி இருந்தார். தற்போது முகப்பருக்களை முற்றிலும் குணப்படுத்தி செம அழகாக இருக்கும் அவருக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லையாம், தனியாக குறும்படங்கள், வெப் சீரீஸ்களை இயக்கி அதில் நடித்தும் வரும் அவருக்கு துணையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் இருப்பதாக இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.