புது வீட்டில் குடியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – சீரியலில் அடுத்த திருப்பம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருவது போல் காட்டப்படுவது தான் அந்த சீரியலின் பலமாக உள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போதைய காலத்தில் நடைமுறையில் இருக்கும் அரிதான கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல். இதனால் இந்த சீரியலுக்கு குடும்பத்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் எதாவது புது புது விஷயத்தை வைத்து கதையை நகர்த்தி வருகின்றனர். அதிலும், சமீப காலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஒரே விசேஷமாக தான் சென்று வருகிறது. கயல் பாப்பா பிறந்த நாளில் ஆரம்பித்து, தற்போது ஐஸ்வர்யா, மீனா பிறந்த நாள் வரை ஒரே கோலாகலமாக தான் இருந்து வருகிறது.
செழியனை அடிக்கும் எழில், சுக்குநூறாக உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது நீண்ட நாள் ஆசையான புது கடையை பல தடைகளையும் மீறி திறந்து விட்டனர். அவர்களின் குடும்பம் பெரியதாகி வருவதால் வீட்டில் இடம் போதவில்லை என்று அவ்வப்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் புலம்பி வருவார்கள். இதனால் புது வீடு கட்டி குடிபோகலாம் என்ற திட்டமும் அவர்களுக்கு இருந்து வருகிறது. அந்த கதையை எப்போது தொடங்குவார்கள் என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பொதுவாக ஏதேனும் விளம்பர படங்களில் நடிக்கும் போது கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றனர். இதனால் அதில், நடிக்கும் பலரும் அநேக நேரங்களில் ஒன்றாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய பதிவு வெளியாகியுள்ளது. அதில், மூர்த்தி, தனம், கண்ணன், முல்லை என்று இவர்கள் அனைவரும் புது வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளது போல் உள்ளது. இதனால் சீரியலில் புதிய திருப்பம் வர உள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Best TNPSC Coaching Center – Join Now