முகப்பரு சிகிச்சை குறித்து மனம் திறந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் ஆதரவு!
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியுள்ள விஜே தீபிகா அதற்கான காரணத்தை விளக்கி இருந்த நிலையில், முகப்பரு குறித்த சிகிச்சை தொடர்புடைய சில தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா. நிகழ்ச்சி தொகுப்பாளராக மூன் தொலைக்காட்சியில் அறிமுகமான இவரது சினிமா பயணம், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வந்து நிற்கிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தீபிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சில மாதங்களே ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அவர் தீடீரென சீரியலை விட்டு விலகினார்.
பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த சீரியலில் சிறிது காலமே தோன்றி இருந்தாலும் ரசிகர்கள் கண்ணன்- ஐஸ்வர்யா ஜோடிக்கு ஏக ஆதரவுகளை கொடுத்து வந்தனர். அதுவரை கண்ணுக்கு நிரந்தரமான ஜோடி என்று இல்லாத நிலையில், ஐஸ்வர்யா இந்த தொடர் முழுவதும் பயணிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது திடீர் விலகல் ரசிகர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய தீபிகா, அதற்கான காரணத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதாவது அவரது முகத்தில் ஏற்பட்ட சில பருக்கள் காரணமாக தொடரில் நடிக்க முடியாமல் விலகியதாக கூறியிருந்தார். இந்நிலையில் முகத்தை சீராக்குவதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை குறித்து பேட்டி ஒன்றின் மூலம் ரசிகர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அவர். அதாவது முகப்பருக்காக மருந்துகளை எடுத்து வரும் இவர், பால், தயிர், சுகர் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
மேலும் சிக்கன், மீன், கிழங்கு வகைகள், கேரட், முட்டை வெள்ளை கரு, ஆகியவற்றை சிகிச்சைக்காக தவிர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் விஜே தீபிகாவுக்கு தங்களது ஆதரவுகளை இதுவரை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.