பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற நடிகர் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் முதன் முதலில் தொடங்கப்பட்ட சர்வதேச நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1 மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் ஓவியா, ஆரவ் காதலிற்காக தற்கொலை செய்து கொள்ள கூட போனார். மேலும் ஓவியா ஆரவ் காதலுக்கு மருத்துவ முத்தம் என அடையாளத்தை கமல் வழங்கினார். இது தான் முதல் சீசன் என்பதால் என்ன வெளியே தெரியும் என தெரியாமல் எதார்த்தமாக போட்டியாளர்கள் இருந்தார்கள்.
கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி – வெளியான வீடியோ!
அதன் பின் வந்த சீசன்களில் கேமரா இருப்பதை உணர்ந்து போட்டியாளர்கள் நடந்து கொள்வது போல தோணுகிறது. முதல் சீசனில் இறுதி சுற்றுவரை சென்று ஆரவ் டைட்டில் வின்னராக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தது. மேலும் ஓவியா ஆரவ் காதல் பிக்பாஸ் முடிந்த பின்னரும் தொடர்வது போல சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆரவ் தான் ஏற்கனவே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
திருமணத்திற்கு ஓவியா வரவில்லை என ஓவியா ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் ஆரவ்வின் மனைவி ராஹேனுக்கு சமீபத்தில் சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த சீசன் முடிந்து தற்போது 3 ஆண்டுகள் ஆனாலும் ஓவியா ஆர்மி இன்னும் இருந்து கொண்டு தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.