திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வோர் கவனத்திற்கு – VIP பிரேக் தரிசனம் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பக்தர்களுக்கு தினசரி தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து:
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் உலங்கெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு புகழ் பெற்ற சிறந்த கோயில் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தளர்வுகளின் அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தனிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசின் CAB ஊழியர்களுக்கு 12% DA உயர்வு – அறிவிப்பு வெளியீடு!
ஆனாலும் குழந்தை வைத்திருப்பவர்கள், முதியவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தரிசனம் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரவி வந்தது. அதனை தேவஸ்தானம் மறுத்து விளக்கம் அளித்தது. அதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேரடி டோக்கன் முறை தடை செய்யப்பட்டு ஆன்லைன் டோக்கன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!
மேலும் 2 டோஸ் தடுப்பூசி சான்று அல்லது கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் தேவஸ்தானத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்த விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று முதல் ஏற்கப்பட மாட்டாது. அதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை அக்.4ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.