மத்திய அரசின் CAB ஊழியர்களுக்கு 12% DA உயர்வு – அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த (CAB) ஊழியர்களுக்கு 5 மற்றும் 6 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி (DA) 12% வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
DA உயர்வு
கடந்த சில நாட்களாக மத்திய அரசுத் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 6வது மற்றும் 5வது ஊதியக் குழுவின் படி சம்பளம் பெறும் மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் (CAB) ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பில் 6வது ஊதியக்குழுவின்படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) விகிதம் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – கூடுதல் ஊக்கத்தொகை வழங்க ஆணை!
இது குறித்து நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பேட்டில் (OM) நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை (DoE), மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் (CAB) ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம் ஊதியத்தை தொடர்ந்து உயர்வை பெறுகிறது என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இப்போது 6வது மத்திய ஊதியக் குழுவின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதம் அல்லது தர ஊதியம், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் தற்போதைய விகிதமான 189%லிருந்து 196% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – தேசிய விளையாட்டு விருதுகள் குழு!
இந்த உயர்த்தப்பட்ட DA தொகை ஜூலை 15, 2021 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 5வது ஊதியக்குழுவின்படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) தொகை 12% உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘5வது மத்திய ஊதியக் குழுவின்படி, முன் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது தர ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு DA விகிதம் 356% லிருந்து 368% ஆக அதிகரித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட DA தொகை ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.