அப்போ இனி இவரை தமிழ் சீரியல்ல பார்க்க முடியாதா – ரசிகர்களுக்கு டாடா காட்டிய சின்னத்திரை நடிகர்!

0
அப்போ இனி இவரை தமிழ் சீரியல்ல பார்க்க முடியாதா - ரசிகர்களுக்கு டாடா காட்டிய சின்னத்திரை நடிகர்!
அப்போ இனி இவரை தமிழ் சீரியல்ல பார்க்க முடியாதா - ரசிகர்களுக்கு டாடா காட்டிய சின்னத்திரை நடிகர்!
அப்போ இனி இவரை தமிழ் சீரியல்ல பார்க்க முடியாதா – ரசிகர்களுக்கு டாடா காட்டிய சின்னத்திரை நடிகர்!

விஜய் டிவியில் முதல் சீசனில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இரண்டாவது சீசனில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் தான் “மௌன ராகம்”. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகர் சல்மான் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மௌன ராகம் சீரியல்:

சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட விஜய் டிவியில் பல சீரியல்கள் புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இரண்டு சீசன்களாக மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் மௌன ராகம் சீரியல். இந்த சீரியலில் அப்பாவை பிரிந்த சிறு குழந்தையின் கதை முதல் சீசனில் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் அந்த சிறு பெண் தற்போது வளர்ந்து கல்யாணம் முடிந்து அதில் ஏற்படும் கஷ்டங்கள் காட்டப்படுகிறது.

பரபரப்பான கதைக்களம்.. கடைசி நிமிடத்தில் ஹேமாவை கண்டுபிடித்த கண்ணம்மா.. வைரல் ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் இரண்டாவது சீசனில் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வருண் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் நடித்து வருகிறார். பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதத்தில் புது ட்விஸ்ட் நடக்க இருக்கிறது. அதாவது நடிகர் சல்மான் சீரியலை விட்டு விலகி இருப்பதாகவும், அவர் மலையாளம் சீரியலில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த நேரத்தில் மௌன ராகம் 2 சீரியல் விரைவில் முடிய இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இனிமேல் இவர் மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!