சமையல் போட்டியில் தோற்று போன சரவணன், சந்தியாவை திட்டும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் போட்டியில் சரியாக கலந்து கொள்ள முடியாததை நினைத்து சிவகாமி வருத்தப்படுகிறார். பின் சரவணன் போட்டியில் விளையாட முடியவில்லை என நினைத்து வருத்தப்படுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சக்கரை என்ன ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அண்ணனிற்கு எப்படி புரியும் என கேட்க, சந்தியாவின் பேச்சை கேட்டு நடுவர்கள் தமிழில் பேசுகின்றனர். பின் போட்டி தொடர வெளிநாட்டு சாப்பாடு ஒன்று வைக்கப்படுகிறது. இது என்ன சாப்பாடு சரவணன் எப்படி கண்டுபிடிக்க போகிறான் என சரவணன் அப்பா சொல்ல, சந்தியா அவருக்கு இதை பற்றி எதுவும் தெரியாது என சொல்கிறார். பின் சரவணன் அதை சாப்பிட்டு பார்த்து கண்டுபிடிக்க, நீண்ட நேரமாக எழுதுகிறார்.
அனைவரும் எழுதி முடித்தபின் சரவணன் நேரம் முடிந்துவிட்டது என சொல்கின்றனர். பின் நடுவர் அனைவரும் எழுதியதை பார்க்க அவர் கொஞ்ச பொருள்களை கண்டுபிடித்து எழுதி இருக்கிறார். அதனால் சந்தியா வருத்தப்பட சிவகாமி இப்படி இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு கூட்டி சென்று என் புள்ளையை இப்படி அசிங்கப்படுத்துகிறாள் என சந்தியாவை திட்டுகிறார். சரவணன் போட்டியில் தோல்வி பெற மீண்டும் மறுவாய்ப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி பாஸ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!!
அதனால் சந்தியா நிம்மதியாக இருக்க, சிவகாமி பக்கத்து வீட்டில் இருந்து வந்து சிலர் சரவணனை குறை சொல்கின்றனர். ஒரு ஜிலேபி கூட செய்ய தெரியாமல் இப்படி தோற்று போறான் என கிண்டல் செய்வது போல பேசுகின்றனர். மறுபக்கம் சரவணன் சோகமாக இருக்க ஆதி இதெல்லாம் நமக்கு தேவையா ஊருக்கு சென்றுவிடுவோம் மறுவாய்ப்பு அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஆனால் செந்தில் வெற்றி தோல்வி எல்லாம் போட்டியில் இருக்கும் அதற்காக செல்ல முடியுமா என கேட்கிறார். சந்தியா அவர் ஜிலேபி சரியாக வராமல் போனதால் தான் இப்படி வருத்தமாக இருக்கிறார். யாரு வயரை கட் செய்தார் என கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.