Post Office-இல் குழந்தைகளுக்காக சேமிக்கும் திட்டம் – வட்டி மட்டுமே 66 ஆயிரம் ரூபாய்!பெற்றோர்கள் கவனத்திற்கு!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. தற்போது குழந்தைகளுக்கான மாதாந்திர வருமான திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது.
மாதாந்திர வருமான திட்டம்
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. அதில் குறிப்பாக இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்தத் தொடங்கின. அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் கூட கணக்கு துவங்க கூடிய மாதாந்திர வருமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷாவின் புதிய தோற்றம் – இதற்காக தானா? ரசிகர்கள் வாழ்த்து!
இதன் மூலம் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஒரு தொடர்ச்சியான வருவாய் பெற முடியும். இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி படிப்பிற்கான செலவுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் கூட்டுக்கணக்கில் இணைவதன் மூலம் ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம். இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி 6.6% ஆகும். இந்த சேமிப்பு திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலங்கள் 5 ஆண்டுகள் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கலெக்டர் வேண்டுகோள்!
உதாரணமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1100 வட்டி தொகை கிடைக்கும். அதனை தொடர்ந்து 5 ஆண்டுகள் முடிவில் ரூ.66, 000 வரை கிடைக்கும். இவ்வாறு முதலீடு தொகையின் அடிப்படையில் மாத வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையை ஒவ்வொரு மாதமும் எடுக்காமல் இருந்தால் மேலும் அதற்கான வட்டி வழங்கப்பட மாட்டாது. அதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேவைக்கேற்ப முதலீடுகளை செலுத்த வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலத்தில் கல்வி செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.