பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி பாஸ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!!
பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்ல கொரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடு:
கடந்த வருடம் முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. . இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து நாடுகளும் மக்களுக்கு செலுத்தியது. இதன் விளைவாக கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பி கொண்டிருந்தனர்.
Post Office இல் 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – சம்பளம், விண்ணப்ப முறை விளக்கம்!
இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொது இடங்களுக்கு செல்ல கொரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டிச.13 முதல் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்த மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நைட் கிளப்புகள், 500 பேருக்கும் அதிகமானவர்கள் கூடும் உள்ளரங்குகள், 4000 பேருக்கு அதிகமான கூட்டத்தை கொண்ட வெளியரங்கு களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழை உறுதி செய்யும் NHS பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.