இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை, ஆனந்த கண்ணீர் வடித்த கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த திருப்பம்!

0
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை, ஆனந்த கண்ணீர் வடித்த கதிர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த திருப்பம்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை, ஆனந்த கண்ணீர் வடித்த கதிர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த திருப்பம்!
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை, ஆனந்த கண்ணீர் வடித்த கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த திருப்பம்!

தனக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிந்து கவலையில் இருக்கும் முல்லை செயற்கை முறையின் மூலமாக கர்ப்பமாகவுள்ளார். பட்ட துயரத்திற்கெல்லாம் விடிவு காலம் போல இரட்டை குழந்தையை பெற்றெடுத்து கதிரின் கையில் கொடுக்கும்படி கதை வேறு ட்ராக்கில் பயணிக்கவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது முல்லையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கதிரிடம் கூறிவிடுகிறார். ஆனால் முல்லையிடம் உண்மையை கூறாமல் கதிர் மறைத்துவிடுகிறார். குழந்தை பிறந்து பல ஆண்டுகள் ஆகியும் தனக்கு குழந்தை பிறக்கவில்லை என முல்லை குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்படுகிறார். இதற்கு பின்பு மருத்துவர் கொடுத்த ரிபோர்ட்டை பார்த்து தனக்கு குழந்தை பிறக்காது என்பதை முல்லை தெரிந்து கொள்கிறார்.

ஆலியாவின் 2வது குழந்தைக்காக சொகுசு கார் வாங்கிக் கொடுத்த சஞ்சீவ் – குவியும் விமர்சனங்கள்!

இதற்கு மேலும் இந்த குடும்பத்தில் இருந்து எந்த பயனும் இல்லை என நினைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். பின்பு கதிர் முல்லையை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்கிறார். தன்னால் ஒரு குழந்தையை கூட கதிருக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை என நினைத்து வீட்டில் உள்ள எவரின் முகத்தையும் பார்க்கமுடியாமல் கூனி குறுகி போகிறார். முல்லைக்கு கதிர் தான் முழுக்க முழுக்க உறுதுணையாக இருந்து வருகிறார்.

பிரசவத்திற்கு பிறகு ‘ராஜா ராணி 2’ சீரியலில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இயற்கை முறையில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர் கூறியதால் செயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க சிகிச்சை மேற்கொள்ளப் போகிறார்கள். பல லட்சங்கள் செலவழித்து ஒரு வழியாக முல்லை கர்ப்பமாகிறார். செயற்கை முறையில் குழந்தை பிறந்தால் பெரும்பாலும் இரட்டை குழந்தை தான் பிறக்கும். அடிக்கடி முல்லையும் கதிரிடம் நமக்கு இரட்டை குழந்தை பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கூறிக்கொண்டே இருப்பார். அதே போல முல்லைக்கு இரட்டை குழந்தை பிறக்கும்படியாகவே கதைக்களம் செல்லவுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!