பிரசவத்திற்கு பிறகு ‘ராஜா ராணி 2’ சீரியலில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
பிரசவத்திற்கு பிறகு 'ராஜா ராணி 2' சீரியலில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்திற்கு பிறகு 'ராஜா ராணி 2' சீரியலில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்திற்கு பிறகு ‘ராஜா ராணி 2’ சீரியலில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

பிரசவத்திற்கு பிறகு ராஜா ராணி தொடரில் நடிக்கமாட்டேன் என ஆலியா கூறியதை தொடர்ந்து தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மீண்டும் ராஜா ராணி தொடரில் ஆலியா இணையும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதையே லட்சிய கனவாக கொண்டு சந்தியா வளர்ந்து வருகிறார். சந்தியாவின் பெற்றோரும் சந்தியாவுக்கு முழுக்க முழுக்க உறுதுணையாக இருந்து வருகின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சந்தியாவின் பெற்றோர் விபத்தில் சிக்கி இறந்துவிடுகின்றனர். சந்தியாவின் அண்ணனும் சந்தியாவுக்கு படிக்காமல் ஸ்வீட் கடையில் வேலை பார்க்கும் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.

‘ஆலியா மருமகளா வந்தது நாங்கள் செய்த தவம்’ – மாமியார் ஓபன் டாக்! வைரலாகும் வீடியோ!

இதனால் சந்தியாவின் ஐபிஎஸ் கனவு பாதியிலேயே நின்றுவிடுகிறது. சந்தியாவும் பல முறை சரவணனிடம் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதை சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் சந்தியாவின் மாமியாருக்காக குடும்ப பெண்ணாக மட்டுமே இருக்கலாம் என சந்தியா முடிவு செய்கிறார். இதற்கு பிறகு சரவணனுக்கு சந்தியாவின் ஐபிஎஸ் கனவு பற்றி தெரியவருகிறது. தனது அம்மாவையும் எதிர்த்து சந்தியாவை ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா தனது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் கூட ஆலியா தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். குழந்தை பிறக்க கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே ஆலியா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மாடலான ரியா ராஜா ராணி சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ஆலியா சீரியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து ஆலியாவிடம் கேட்ட போது மீண்டும் சீரியலில் இணைய விருப்பம் இல்லை எனவும், ரியா தான் இனி ராஜா ராணி சீரியலில் நடிப்பார் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஆலியா மீண்டும் சீரியலில் இணையும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!