‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனும், தீபிகாவும் காதலர்களா? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்து நடித்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது ஒரு ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதனை பார்த்த பலருக்கும் இருவரும் காதலர்களா என்கிற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சீரியல்களை விட இந்த சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. சின்னத்திரையின் மூலமாக பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். வெள்ளித்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் அளவுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் உள்ளன.
முல்லைக்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பை நடத்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – வைரலான ப்ரோமோ!
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக பிரபலமானவர்கள் தான் கண்ணன் மற்றும் தீபிகா. முகப்பரு பிரச்சனையின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தீபிகா சீரியலில் இருந்து விலகினார். தீபிகாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு சாய் காயத்ரி நடிக்க வந்தார். ஆனால் ரசிகர்களுக்கு கண்ணனுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா மட்டும் தான் சரியாக வரும் என பலரும் தீபிகாவையே நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டனர். சீரியலில் நடிக்கும் போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
கலர்ஸ் தமிழ் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அவ்வப்போது இருவரும் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். நாளடைவில் கண்ணன் – ஐஸ்வர்யா என்றே இவர்களது பெயர் மக்களின் மனதில் பதிந்துவிட்டது. சீரியலை விட்டு சென்ற பிறகும் கூட தீபிகா கண்ணனுடன் பழகி வருகிறார். பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் இருவருமே ஒன்றாக இணைந்தே சுற்றி கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவர்கள் நண்பர்களாக தான் பழகி கொண்டிருக்கிறார்களா அல்லது காதலித்து கொண்டிருக்கிறார்களா என ரசிகர்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளது.