இடம் விற்பவரிடம் பணத்தை கொடுத்த மூர்த்தி, கதிரின் புதிய ஐடியாவால் கோவப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
இடம் விற்பவரிடம் பணத்தை கொடுத்த மூர்த்தி, கதிரின் புதிய ஐடியாவால் கோவப்படும் முல்லை - இன்றைய
இடம் விற்பவரிடம் பணத்தை கொடுத்த மூர்த்தி, கதிரின் புதிய ஐடியாவால் கோவப்படும் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
இடம் விற்பவரிடம் பணத்தை கொடுத்த மூர்த்தி, கதிரின் புதிய ஐடியாவால் கோவப்படும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தி மீது கோவமாக இருக்க ஆனால் மூர்த்தி அவரை சமாதானப்படுத்துகிறார். பின் இடம் விற்பவரிடம் மீதி பணத்தை மூர்த்தி கொடுக்கிறார். மறுபக்கம் கதிர் இலவசமாக பிரியாணி கொடுக்க, அது முல்லைக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் பாண்டியனை தூங்க வைக்க ஆனால் அவன் தூங்காமல் இருக்கிறான். அப்போது மூர்த்தி தனத்தை கூப்பிட ஆனால் தனம் கோவமாக இருக்கிறார். மூர்த்தி தலை வலிப்பதாக இருக்க, தனம் தேவை இல்லாததுக்கு கோவப்பட்டால் அப்படி தான் தலை வலிக்கும் என சொல்கிறார். பின் மூர்த்தி தேவை இல்லாமல் வெளியே போனான் அதான் எனக்கு கோவம் வந்ததாக சொல்கிறார். பின் மூர்த்தி வீடு கட்டுவது பற்றி பேசுகிறார். அதனால் தனம் சமாதானம் ஆகிறார். மறுபக்கம் கதிர் காலையில் எழுந்து முல்லையிடம் பேச ஆனால் முல்லை கோவமாக இருக்கிறார்.

கதிர் முல்லையை கிளம்ப சொல்ல ஆனால் முல்லை நான் வரவில்லை என சொல்கிறார். நைட் சொன்னது போல தான் செய்ய போறீங்களா என கேட்க ஆமாம் என கதிர் சொல்கிறார். நீங்க செய்வது சரி இல்லை என சொல்ல ஆனால் கதிர் இதில் என்னை எதுவும் சொல்லாதீங்க என சொல்கிறார். கதிர் எதுனாலும் கடையில் பேசிக் கொள்ளலாம் என சொல்ல ஆனால் முல்லை நான் கடைக்கு வரவில்லை என சொல்கிறார். பின் கதிர் கடைக்கு வர, முருகன் சாம்பாருக்கு பருப்பு ஊற போடவா என கேட்கிறார். வேண்டாம் இன்று சிக்கன் பிரியாணி என கதிர் சொல்ல, எனக்கு புரியவில்லை என முருகன் சொல்கிறார். ஆனால் கதிர் என்னிடம் எதுவும் பேசாதீங்க என சொல்கிறார்.

ராமமூர்த்தியை கண்டபடி பேசும் கோபி, ஓனரிடம் ஆர்டருக்காக கெஞ்சும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

பின் கதிர் வேலைகளை பார்க்க தொடங்கிவிடுகிறார். மறுபக்கம் மூர்த்தி வீட்டில் இருக்க, இடம் விற்பவர் வருகிறார் வந்து பணம் கேட்கிறார். அந்த இடமே 30 லட்சம் தான் உடனே பணம் கொடுக்க வேண்டுமா என மீனா கேட்க, மூர்த்தி பணம் கொடுத்தால் வேலை மிச்சம் என சொல்கிறார். பின் பணம் வாங்குபவர் வர பணத்தை வாங்கி கொள்கிறார். மறுபக்கம் ஹோட்டலிற்கு முல்லை வர, இருவரும் பேசிக் கொள்ளாமல் இருப்பதை பார்த்து முருகன் என்ன ஆச்சு என கேட்கிறார். பின் முல்லை அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல, மாப்பிள்ளை உடன் எதாவது பிரச்சனையா என முருகன் கேட்கிறார். முல்லை கதிர் செய்ய போவதை சொல்ல, முருகன் அதெல்லாம் சரியாக வருமா என கேள்வி கேட்கிறார். கூட்டம் அதிகமாக வரும் சமாளிக்க முடியுமா என முருகன் கேட்க, கதிர் நான் நன்றாக யோசித்துவிட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!