வீட்டிற்கு திரும்ப வரும் கதிர் முல்லை.. கதிரை வர சொல்ல தயங்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
வீட்டிற்கு திரும்ப வரும் கதிர் முல்லை.. கதிரை வர சொல்ல தயங்கும் மூர்த்தி - இன்றைய
வீட்டிற்கு திரும்ப வரும் கதிர் முல்லை.. கதிரை வர சொல்ல தயங்கும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
வீட்டிற்கு திரும்ப வரும் கதிர் முல்லை.. கதிரை வர சொல்ல தயங்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை பற்றி மூர்த்தி போட்டி நடக்கும் மேடையில் பேசுகிறார். பின் அனைவரும் கிளம்பி காரில் வருகின்றனர். கதிர் வீட்டிற்கு வந்துவிட, மூர்த்தி அவரை வீட்டிற்கு கூப்பிடுவார் என எதிர்பார்த்து இருக்கிறார். அப்போது பார்வதி வந்து மூர்த்தி உடன் சேர்ந்ததை நினைத்து கடுப்பில் இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை போட்டியில் வெற்றி பெற்றது பற்றி பேச சொல்கின்றனர். அப்போது மூர்த்தி என் தம்பி இப்படி எல்லாம் பேசுவானா என நினைத்து ஆச்சர்யமாக இருந்ததாக சொல்கிறார். வீட்டில் பேச யோசிக்கும் பையன் ஆனால் இப்போது இவ்வளவு அருமையாக பேசியதை நினைத்து சந்தோசமாக இருக்கிறது. நீங்க போட்டி நடத்தி பரிசு மட்டும் கொடுக்காமல் எங்க குடும்பத்தை சேர்த்து வைத்திருக்கீங்க என சொல்கிறார். இதே போல கதிரும் முல்லையும் சந்தோசமாக 100 வருஷம் இருக்க வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். பின் அனைவரும் காரில் ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது அண்ணன் தனக்காக வந்ததை நினைத்து கதிர் சந்தோசப்படுகிறார்.

பின் ஜீவா ஒரு இடத்தில் காபி சாப்பிட நிறுத்துகிறார். அனைவரும் காபி சாப்பிட, கதிர் எனக்கு ஒரு பிரச்சனை என்றதும் நீங்க வந்ததற்கு எனக்கு ரொம்ப சந்தோசம் என சொல்ல, ஜீவா முல்லை அங்கே நடப்பது பற்றி சொல்ல எனக்கு பதட்டமாகிவிட்டது என சொல்கிறார். மூர்த்தி ஜீவா தான் வேகமாக வண்டி ஓட்டி வந்ததாக சொல்கிறார். பின் மூர்த்தி பாசத்தை பார்த்து கதிர் அழ மூர்த்தி அழாமல் இருக்க சொல்கிறார். பின் முல்லை பத்திரபதிவிற்கு வராததால் கோவம் இல்லையே என கேட்க, ஆனால் மூர்த்தி அதான் காரணம் சொல்லிடீங்களே என சொல்கிறார். பின் கதிர் வண்டியை ஓட்ட ஜீவா காரில் வருகிறார். கொஞ்ச தூரம் சென்றதும் மீண்டும் ஜீவா வண்டியை ஓட்டுகிறார்.

தமிழகத்தில் இன்று (நவ. 8) சந்திரகிரகணம் – நேரம் என்ன? வெறும் கண்ணில் பார்க்கலாமா?

மறுபக்கம் முல்லை கதிர் வீட்டிற்கு வர, அங்கே பார்வதி இருக்கிறார். போன காரியம் என்ன ஆனது இவர்களுடன் எதற்கு வந்திருக்கீங்க என கேட்க, முல்லை எல்லாம் நான் சொல்கிறேன் என சொல்கிறார். பின் பார்வதி இவங்க என்ன பேசிட்டாங்க ஒன்றும் புரியவில்லை என நினைக்கிறார். பின் மூர்த்தி கிளம்பலாம் என சொல்ல, ஜீவா கதிரை வீட்டிற்கு கூப்பிடலாம் என நினைக்கிறார். ஆனால் கதிரை கூப்பிட தயங்கி மூர்த்தி கூப்பிடாமல் இருக்கிறார். முல்லை மூர்த்தி கூப்பிடுவார் என காத்திருக்க ஆனால் கூப்பிடவில்லை. பின் மூர்த்தி வண்டியில் ஏறி கிளம்புகிறார். கதிர் மூர்த்தி கூப்பிடுவார் என நினைக்க ஆனால் கூப்பிடவே இல்லை. பின் கதிர் வருத்தப்பட முல்லை அவங்க போறாங்க என சொல்கிறார். நம்மை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம் என சொல்ல, நமக்கு பணம் கிடைத்துவிட்டது வரலாமா என நீங்களாவது கேட்டிருக்கலாம் என சொல்ல, அப்போது மூர்த்தி கார் மீண்டும் வருகிறது. மூர்த்தி நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை. நாம எல்லாரும் சேர்ந்து இருந்தால் தான் வீடு என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!