தமிழகத்தில் இன்று (நவ. 8) சந்திரகிரகணம் – நேரம் என்ன? வெறும் கண்ணில் பார்க்கலாமா?
தமிழகத்தில் இன்று (நவம்பர் 8) சந்திரகிரகணம் தோன்றும் நேரம் குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இன்று நிகழ இருக்கும் சந்திரகிரகணத்தை மக்கள் வெறும் கண்ணில் பார்க்கலாமா என்பது குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சந்திரகிரகணம்:
இன்று (நவம்பர் 8) முழு சந்திரகிரகணம் ஏற்பட இருக்கிறது. பௌர்ணமி தினத்தன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சந்திரகிரகணம் எனப்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சந்திரகிரகணத்தை பார்க்க முடியாது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தான் சந்திரகிரகணத்தை பார்க்க முடியும்
மேலும் சென்னையில், சந்திர கிரகணம் மாலை 5 மணி 39 நிமிடங்கள் தொடங்கி அடுத்த நாள் காலை 8.59 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சந்திரகிரகணம் ஏற்படும் போது ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற இருக்கும் சந்திரகிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்கலாம்.
இந்தியாவில் அடுத்த முழு சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி நிகழும் எனவும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (நவம்பர் 8) சந்திரகிரகணம் இருப்பதால் பல முக்கிய கோவில்கள் இன்று மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் சந்திரகிரகணம் நிகழும் போது வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.