ஜனார்தனனிடம் சண்டைக்கு போன ஜீவா.. குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
ஜனார்தனனிடம் சண்டைக்கு போன ஜீவா.. குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் - இன்றைய
ஜனார்தனனிடம் சண்டைக்கு போன ஜீவா.. குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
ஜனார்தனனிடம் சண்டைக்கு போன ஜீவா.. குடும்பத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா பொருட்களை எல்லாம் தூக்கி ஏறிய ஜீவாவிற்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் ஜீவா சண்டைக்கு வர தனம் அவரை தடுக்கிறார். பின் கதிர் குடும்பத்தை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் பொருள்களை எல்லாம் தூக்கி ஏறிய அதை பார்த்து கதிரும் ஜீவாவும் ஜனார்தனனை முறைக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் என்ன முறைக்கிறீர்கள் என கேட்க, உடனே ஜீவா இதற்கு மேல் உனக்கு மரியாதை இல்லை என சொல்கிறார். பின் அந்த ஓட்டை வீட்டை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நான் வாங்குனால் என்னையே வெளியே போக சொல்வீங்க அதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டு இருப்பேனா என ஜனார்த்தனன் சொல்கிறார். உடனே ஜீவாவிற்கு பயங்கர கோவம் வர அவர் மீனா அப்பாவை வெளியே போயா என சொல்கிறார். தனம் ஜீவாவை அமைதியாக இருக்க சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பின் ஜீவா மீனாவின் அப்பா என பார்க்கிறேன் இதற்கு மேல் இங்கே இருந்தாய் அவ்வளவு தான் என சொல்கிறார். தனமும் மீனாவும் ஜீவாவை தடுத்து நிறுத்த மீனாவின் அப்பா கிளம்புகிறார். ஜீவா லட்சுமி அம்மாவின் சேரை பார்த்து வருத்தப்படுகிறார். இந்த பொருள்களை எல்லாம் என்ன செய்வது என மூர்த்தி கேட்க, தனம் பொருள்களை எடுக்க சொன்னால் நாம எடுத்து இருப்போம் இப்படி தூக்கி போட்டு போயிருக்கார். எவ்வளவு மோசமானவர் என ஜீவா சொல்கிறார். பின் குடும்பத்தினர் பொருள்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்து உள்ளே வைக்கின்றனர். மூர்த்தி உடைந்த போட்டோவை பார்த்து வருத்தப்படுகிறார்.

இந்த நாளை நாம எல்லாரும் நியாபகம் வைத்து கொள்ள வேண்டும். இதற்கு பதில் அவரிடம் சண்டை போடுவது இல்லை. அவர் முன் வாழ வேண்டும். சந்தோசமாக வாழ வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். நாம பெரிதாக வீடு கட்ட வேண்டும் என ஜீவா சொல்கிறார். அதில் நாம சந்தோசமாக வாழ போறோம் என சொல்கிறார்கள். அப்போது முல்லை அப்பா வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். முல்லை நடந்ததை சொல்ல, முருகன் அவர்களை நினைத்து வருத்தப்படுகிறார். பொருள்களை என்ன செய்வது என முருகன் கேட்க, கொஞ்ச பொருள்களை எடுத்து வைக்கிறோம் என தனம் சொல்கிறார்.

TNPSC தேர்வர்களுக்கு அலர்ட்.. அதிகரிக்கும் வதந்திகள் – அதிகாரிகள் எச்சரிக்கை!

பின் பாதி பொருள்களை விற்றுவிடலாம் என மீனா சொல்ல, நீங்களும் உங்க அப்பா மாதிரி பேசாதீங்க என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனா நான் நல்லதுக்கு தான் சொன்னேன் என சொல்ல, ஜீவா உன் அப்பா செய்யும் தவறு மட்டும் உனக்கு தெரியாது என சொல்கிறார். பின் கதிர் பொருள்களை ஹோட்டலில் வைக்கலாமா என கேட்க, அங்கே வேண்டாம் என மூர்த்தி சொல்கிறார். மீனா இதற்கு தான் பெரிய வீடாக பார்க்க சொன்னேன் என மீனா சொல்கிறார். பின் முருகன் நம்ம வீட்டில் பொருள்களை வைக்கலாம் என சொல்கிறார். மழை வருவது போல இருக்கிறது என முருகன் சொல்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என சொல்கிறார்.

கதிர் மூர்த்தியிடம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்ல, மூர்த்தி என்னமோ நடக்கட்டும் என சொல்கிறார். பின் கதிர் பொருள்களை எல்லாம் பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, முல்லை வந்து தூங்க வர சொல்கிறார். ஆனால் கதிர் நீ போ என சொல்கிறார். முல்லை கதிரிடம் என்ன யோசித்து கொண்டிருக்கீங்க என கேட்க, கதிர் மழை வருவது போல இருப்பதாக சொல்கிறார். முல்லை நாம அங்கே சென்று இருக்கவே கூடாது அதனால் தான் அவங்களுக்கு இந்த நிலைமை என சொல்கிறார். நாம இருவருக்காக தான் எல்லாரும் கஷ்டப்படுறாங்க என முல்லை சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!