பழைய கடையை திறந்த தனம்.. ஜனார்தனனிடன் சவால் விடும் கதிர், ஜீவா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பழைய கடையை தனம் கையால் திறந்து வைக்கிறார். பின் அவரே முதல் வியாபாரம் பார்க்க, மூர்த்தி மற்றும் தம்பிகள் சந்தோசப்படுகின்றனர். பின் ஜீவா கதிர் ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று சவால் விடுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பழைய கடையை மீண்டும் தயார் செய்ய அதை தனம் திறந்து வைக்கிறார். பின் தனத்தை முதல் வியாபாரம் செய்ய சொல்ல, அவரும் செய்து கொடுக்கிறார். பின் தம்பிகள் தனத்தை பெருமையாக பேச, மூர்த்தி அதை கேட்டு நக்கலடித்து சிரிக்கிறார். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து வியாபாரத்தை தொடங்கி வைக்கின்றனர். பின் கதிர் ஜீவா வெளியே வேலை இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்பி செல்கின்றனர். அவர்கள் நேராக ஜனார்த்தனன் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே ஜனார்த்தனன் பெயரை சொல்லி கூப்பிட, கதிர் ஜனார்தனனை அடிப்பது போல செல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
ஜனார்த்தனன் உன் ரவுடி தனத்தை வெளியே வைத்துக் கொள் என சொல்ல, ஜீவா இவரை அடித்தால் நமக்கு தான் அசிங்கம் என சொல்கிறார். பின் மாப்பிள்ளை பேச்சு எல்லாம் சரி இல்லை என சொல்ல, உடனே ஜீவா யாரு மாப்பிள்ளை என கேட்கிறார். அப்போது சூப்பர் மார்க்கெட் மூட நீங்க தான் காரணம் என எனக்கு தெரியும் என சொல்கிறார். ஆனால் ஜனார்த்தனன் அதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க, கதிர் நீங்க தான் பெரிய ஆள் ஆச்சே உண்மையை ஒப்புக் கொண்டால் என்ன என கேட்கிறார். அப்போது ஜனார்த்தனன் ஆமாம் நான் தான் செய்தேன் என ஒப்புக் கொள்கிறார். நேர்மையாக இருந்தால் எவ்வளவு சிக்கல் வந்தாலும் சமாளிக்க முடியும் என என் அண்ணி அண்ணன் சொல்லி கொடுத்து இருக்காங்க என கெத்தாக பேசுகின்றனர்.
கடை இல்லாமல் இங்கே வந்து என்ன பேசுறீங்க என ஜனார்த்தனன் கேட்க, திமிரை பாரு நாங்க தவறு செய்யவில்லை என நிரூபித்து நாங்க சந்தோசமாக இருக்க தான் போறோம் என சொல்ல, அதையும் நான் பார்க்க தான் போகிறேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். எங்க தொழிலை விட எங்க ஒற்றுமை தான் உனக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் எங்களை என்ன செய்தாலும் பிரிக்கவே முடியாது என கதிர் சவால் விடுகிறார். நாங்க அண்ணன் தம்பிகள் ஒன்றாக தான் இருப்போம் உன்னால் எதுவும் செய்ய முடியாது, எங்களை அழ வைத்து உங்களால் சந்தோசப்பட முடியாது என ஜீவா பேசுகிறார்.
ராதிகா இனியா சண்டையை தீர்த்து வைக்கும் கோபி, இனியாவிற்கு அறிவுரை கூறிய ராமமூர்த்தி – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
நாங்க அண்ணன் தம்பிகள் மட்டுமில்லை எங்க வீட்டிற்கு வந்த உங்க பொண்ணும் சந்தோசமாக தான் இருக்கிறாள். அதை யாராலும் தடுக்க முடியாது. சூப்பர் மார்க்கெட்டை வாங்கிவிட்டு வந்து பேசுகிறோம் என கதிர் சொல்கிறார். மறுபக்கம் கடையில் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறது. பின் கதிர் ஜீவா வர மூர்த்தி என்ன வேலை செய்தீர்கள் என கேட்கிறார். அப்போது கதிர் எதோ சொல்லி சமாளிக்க, மூர்த்தி உண்மையாகவே நீங்க குடாவுன் போனீங்களா என கேட்கிறார்.
இருவரின் முகமும் சரி இல்லை என சொல்ல, தனம் அதெல்லாம் ஒன்றும் இருக்காது என சொல்கிறார். உடனே கதிர் நாங்க எங்கேயும் போகவில்லை என கிளம்ப, ஆனால் மூர்த்தி விடுவதாக இல்லை. மூர்த்தி உங்க பேச்சு சரி இல்லை என சொல்ல, உடனே தனம் சூப்பர் மார்க்கெட் சாவி இருக்கிறதா என பார்க்க சொல்கிறார். தனம் இருப்பதாக சொல்ல, சாவி இங்கே இருக்கிறது நீங்க எப்படி குடாவுன் போனீங்க என கேட்கிறார். கதிர் ஜீவா என்ன சொல்வது என தெரியாமல் இருக்க, தனமும் எங்கே போனீங்க என கேட்கிறார். கதிர் ஜீவா சொல்ல தயங்கி கொண்டிருக்க, தனம் மீனா அப்பாவை தான பார்க்க போனீங்க என கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.