ராதிகா இனியா சண்டையை தீர்த்து வைக்கும் கோபி, இனியாவிற்கு அறிவுரை கூறிய ராமமூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
ராதிகா இனியா சண்டையை தீர்த்து வைக்கும் கோபி, இனியாவிற்கு அறிவுரை கூறிய ராமமூர்த்தி - இன்றைய எபிசோட்!
ராதிகா இனியா சண்டையை தீர்த்து வைக்கும் கோபி, இனியாவிற்கு அறிவுரை கூறிய ராமமூர்த்தி - இன்றைய எபிசோட்!
ராதிகா இனியா சண்டையை தீர்த்து வைக்கும் கோபி, இனியாவிற்கு அறிவுரை கூறிய ராமமூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபியிடம் பாக்கியா தன்னை அடிக்க வந்ததாக சொல்கிறார். உடனே ராமமூர்த்தி இனியாவிடம் நீ நடந்து கொள்வது சரி இல்லை, உன் அம்மா போல நீ பொறுமையாக இருக்க வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் ஜெனி குழந்தைக்கு பெயர் வைப்பதில் சண்டை வருகிறது.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தியிடம் இனியா ராதிகா தன்னை அடிக்க வந்தது பற்றி சொல்கிறார். உடனே ராமமூர்த்தி நீ ராதிகாவிடம் இப்படி எல்லாம் நடந்து கொள்வது சரி இல்லை என சொல்கிறார். பின் இனியா என்னை அடிக்க இவங்க யார் என கேட்க, நீ அவங்க வீட்டில் தான் இருக்கிறாய் என ராமமூர்த்தி சொல்கிறார். உடனே ராமமூர்த்தி உனக்கு இதெல்லாம் தேவையா என கேட்க, எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார். அப்போ நம்ம வீட்டிற்கு போவோம் என ராமமூர்த்தி சொல்ல, டாடியை உடன் அழைத்து செல்வோம் என சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

அந்த நேரம் கோபி வர, ராதிகாவை அழைக்கிறார். ஆனால் ராதிகா வீட்டில் இல்லை என இனியா சொல்கிறார். பின் கோபிக்கு காபி கொண்டு வந்து கொடுக்க கோபி சந்தோசப்படுகிறார். கோபியிடம் நாம வீட்டிற்கு போவோமா டாடி என கேட்க, கோபி அதிர்ச்சி அடைகிறார். இது தான் நம்ம வீடு என கோபி சொல்ல, இது இல்லை டாடி நம்ம வீட்டில் எழில், செழியன், பாட்டி எல்லாரும் இருக்காங்க எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என சொல்கிறார். ராதிகா எதாவது சொன்னாளா என கேட்க, என்னை அவங்க அடிக்க வந்தாங்க என்னை அடிக்க அவங்க யார் என இனியா கேட்கிறார்.

பின் கோபி நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் கோபி ராதிகாவை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது கோபி என்ன ஆச்சு என கேட்க, ராதிகா அதற்குள் உங்களிடம் அவள் சொல்லிட்டாளா என கேட்கிறார். அப்போது கோபி இனியாவிடம் ஏன் அப்படி நடந்து கொள்கிறாய் என கேட்க, அவளுக்கு என்னை கண்டாலே பிடிக்கவில்லை என சொல்கிறார். கோபி முதலில் மயூராவும் என்னை பிடிக்காமல் இருந்தாள் ஆனால் நான் நடந்து கொண்டதை வைத்து தான் பாசமாக பழகினாள், அது போல தான் எல்லாம் என சொல்ல, உடனே ராதிகா இனிமேல் அவள் என்ன செய்தாலும் நான் கேட்கமாட்டேன் என சொல்கிறார்.

கீழே வந்து ராதிகா மயூராவிடம் பேசுகிறார்.பின் இனியாவிடம் பேச, இனியா பதில் சொல்லாமல் இருக்கிறார். ராதிகா என் மீது தான் தவறு என்னை மன்னித்துவிடு என சொல்ல, ஆனால் இனியா எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். ராமமூர்த்தி அதை பார்த்து வருத்தப்படுகிறார். பின் இனியா வர, பார்த்திங்களா நான் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டேன் என சொல்கிறாள். ஆனால் ராமமூர்த்தி நீ செய்வது தவறு, உன் அம்மா இப்படி ஒன்னும் உன்னை வளர்க்கவில்லை என சொல்கிறார். அப்போது இனியா அவங்க யாரு என்னை கேள்வி கேட்க என சொல்ல, உனக்கும் அவங்களிடம் இப்படி நடந்து கொள்ள உரிமை இல்லை என ராமமூர்த்தி சொல்கிறார். எல்லா இடங்களிலும் உன் அம்மா பெயரை நீ காப்பாற்ற வேண்டும் என ராமமூர்த்தி சொல்கிறார்.

ஜப்பானில் அரசின் நூதன திட்டம் – குழந்தை பெற்றால் ரூ.3 லட்சம் உதவித்தொகை!

மறுபக்கம் ஜெனி தனது அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க, ஈஸ்வரி இன்னும் 3 மாதத்தில் உன் வீட்டிற்கு சென்றுவிடுவாய், அப்போ உன் அம்மாவை லீவு போட சொல்லு என சொல்கிறார். ஜெனி சரி என சொல்ல, ஈஸ்வரி ஜெனிக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என சொல்கிறார். என் அம்மாவும் அதான் சொன்னார்கள், பெயர் கூட யோசித்து வைத்ததாக சொல்கிறார். அது மட்டுமல்ல, எந்த சர்ச்சில் ஞானஸ்தானம் கொடுக்கலாம் என முடிவு செய்து வைத்திருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். ஈஸ்வரி பேத்திக்கு நான் தான் சாமி பெயர் வைப்பேன், அவளுக்கு தினமும் விபூதி வைக்க வேண்டும் என கோவமாக பேச, பாக்கியா அவங்க சும்மா சொல்லி இருப்பாங்க என சொல்கிறார். பின் பாக்கியா கேன்டீன் ஆர்டர் வாங்கியவர் போன் செய்து பாக்கியாவை உடனே அலுவலகம் வர சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!