ஹோட்டலில் பெண்களுக்கு வரும் பிரச்சனை.. ஜனார்த்தனன் உடன் கூட்டு சேர்ந்து பழி வாங்கும் பேங்க் மேனேஜர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடிகாரன் ஒருவன் ஹோட்டலிற்கு வர, அவர் தனத்திடம் தகராறு செய்கிறார். உடனே கதிர் வந்து அவனை அடித்து விரட்டுகிறார். மறுபக்கம் கண்ணனின் மேனேஜர் ஜனார்தனனுடன் சேர்ந்து கொண்டு பழிவாங்க திட்டமிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடிகாரன் ஒருவன் கதிர் ஹோட்டலிற்கு வருகிறார். அப்போது அந்த ஆள் சிக்கன் வேண்டும் என தகராறு செய்கிறார். ஐஸ்வர்யா அவனை வெளியே போக சொல்கிறார். அப்போது அவன் எனக்கு இப்பவே சிக்கன் வேண்டும் என சொல்ல, தனம் இதற்கு மேல் பிரச்சனை செய்தால் நான் போலீசை கூப்பிடுவேன் என சொல்கிறார். அப்போது அந்த ஆள் தகராறு செய்ய உடனே கதிர் வந்து அவனை அடித்து விரட்டுகிறார். அப்போது முருகன் வந்து என்ன பிரச்சனை என கேட்க, முல்லை குடித்துவிட்டு ஒருவன் தகராறு செய்ததாக சொல்கிறார்.
Follow our Twitter Page for More Latest News Updates
பின் கதிர் சரியான நேரத்திற்கு வந்ததாக சொல்லி தனம் ஐஸ்வர்யா சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் ஐஸ்வர்யா அவன் பேசியது போல பேசி நக்கல் அடிக்கிறார். மறுபக்கம் ஜீவா மீனா தண்ணிர் பிரச்சனை பற்றி சொன்னதால் அதற்கு திட்டம் ஒன்றை தீட்டுகிறார். அதாவது ட்ரம் கொண்டு வந்து வெளியே தண்ணீர் பிடிக்கிறார்.மீனாவிடம் வந்து ஜீவா பேச, ஆனால் மீனா கோவமாக பேசுகிறார். பின் மீனா தண்ணீர் பிடிக்க போறோமா என கேட்க குடத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். ஜீவா நான் சொல்வதை கேளு என சொல்லி வெளியே வர சொல்கிறார். மீனா வெளியே வந்து பார்த்தும் கோவமாக பேச ஜீவா ட்ரமை பார்க்க சொல்கிறார்.
மீனா இதில் இனிமேல் தண்ணீர் பிடிக்க வேண்டுமா என கேட்க, ஜீவா நன்றாக பாரு எல்லாவற்றிலும் தண்ணீர் இருக்கிறது என சொல்கிறார். பின் மீனா சந்தோசப்பட, ஜீவா தினமும் இதில் நான் தண்ணீர் நிரப்பி விடுவேன் என சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் செய்த காரியத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள். கண்ணன் சந்தோசமாக இருக்க, அந்த முதியவர் லோன் கிடைத்துவிட்டதாக சொல்லி கண்ணனிற்கு நன்றி சொல்கிறார். கண்ணன் சந்தோசமாக பேத்தி கல்யாணத்தை நடத்த சொல்கிறார். மறுபக்கம் பேங்க் மேனேஜர் கண்ணனை பழிவாங்க ஜனார்தனனை சந்திக்கிறார்.
நான் எதிர்பார்க்கவே இல்லை எந்த பிரச்சனையும் இத்தனை வருஷம் வந்ததே இல்லை. ஆனால் கண்ணனால் தான் இப்படி ஆனது என சொல்கிறார். ஜனார்த்தனன் நான் உங்க நண்பன் தான என்னிடம் ஏன் சொல்லவில்லை என கேட்கிறார். உடனே நடந்ததால் என்னால் எதுவும் செய்யவில்லை என மேனேஜரின் கணவர் சொல்கிறார். அப்போது அந்த மேனேஜர் கண்ணனால் தான் எல்லாம் நடந்தது என சொல்கிறார். அவன் வேண்டும் என்றே என்னை மாட்டி விட்டான் என சொல்கிறார். பின் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்தவன் தான் என சொல்ல ஜனார்த்தனன் அதிர்ச்சி அடைகிறார். மேலும் அவனை சும்மா விட கூடாது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.