எழிலிடம் சத்தியம் வாங்கிய ஈஸ்வரி.. கோபியின் அடையாள அட்டை கேட்கும் பேங்க் மேனேஜர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழிலிடம் சத்தியம் வாங்கிய ஈஸ்வரி.. கோபியின் அடையாள அட்டை கேட்கும் பேங்க் மேனேஜர் - இன்றைய
எழிலிடம் சத்தியம் வாங்கிய ஈஸ்வரி.. கோபியின் அடையாள அட்டை கேட்கும் பேங்க் மேனேஜர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
எழிலிடம் சத்தியம் வாங்கிய ஈஸ்வரி.. கோபியின் அடையாள அட்டை கேட்கும் பேங்க் மேனேஜர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அமிர்தாவை நல்ல தோழியாக மட்டும் பார்க்க வேண்டும் என ஈஸ்வரி தலையில் அடித்து சத்தியம் செய்கிறார். மறுபக்கம் கோபியின் அடையாள சான்று இல்லாமல் லோன் கிடைக்காது என்பதால் பாக்கியா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி எழிலை தலையில் கை வைத்து அமிர்தாவை நல்ல தோழியாக மட்டும் பார்ப்பேன் என சத்தியம் செய்ய சொல்கிறார். அப்போது பாக்கியா ஈஸ்வரி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் எழில் நீங்க சொல்வதை கேட்கிறேன் என ஈஸ்வரியிடம் சொல்கிறார். பின் பாக்கியாவிடம் இப்படி தான் ஜெனியை இங்கே வரவழைத்து திருமணம் செய்து வைத்தாய், எழிலிற்கு அப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன் என ஈஸ்வரி சொல்கிறார். பாக்கியா நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் செல்வியும் பாக்கியாவும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்க, அப்போது பழைய செகரட்டரி பாக்கியாவை வம்புக்கு இழுக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இப்படி கட்டப்பை உடன் வந்தால் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என நக்கலடிக்கிறார். இவங்க கோபி சாரின் முன்னாள் மனைவி என சொல்லி நக்கலடிக்கிறார். இவங்க தேர்தலில் நிற்க போறாங்களாம், பெண்களால் இதெல்லாம் செய்ய முடியாது என அவர் பேசுகிறார். பாக்கியா நான் தேர்தலில் நிற்கவில்லை நீங்க அமைதியாக இருங்க என சொல்ல, அவர் நீங்க தேர்தலில் நிற்கமாடீங்க என எனக்கு தெரியும் என அவர் சொல்கிறார். பாக்கியா எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். பின் செழியன் ஜெனிக்கு கால் அமுக்கிவிட்டு அக்கரை உடன் கவனித்து கொள்கிறார்.

அப்போது ஜெனி நீ ஏன் எழில் அமிர்தா பற்றி பாட்டியிடம் சொன்னாய் என கேட்டு கோபப்படுகிறார். பின் செழியன் என்ன குழந்தை வேண்டும் என கேட்க, எனக்கு உன்னை போல பெண் குழந்தை வேண்டும் என சொல்கிறார். பின் எழில் பற்றி பேசியதை கேட்டு செழியன் கோபப்படுகிறார். மறுபக்கம் பாக்கியா பேங்க்கில் லோன் கேட்டு வருகிறார். அப்போது மேனேஜர் உங்களது கணவர் அடையாள அட்டை எதாவது வேண்டும் அப்போது தான் லோன் கிடைக்கும் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா மிகவும் வருத்தப்படுகிறார்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்!

மறுபக்கம் செல்வி ஈஸ்வரி எழில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்க, அதில் சோகமாக காட்சி ஒன்று வருகிறது. அப்போது பாக்கியா சோகமாக வர எழில் பேங்க் சென்று வருகிறாயா என கேட்கிறார். ஈஸ்வரி வண்டியில் போனியா என கேட்க, ஆமாம் என பாக்கியா சொல்கிறார். எழில் நான்கூட்டிக் கொண்டு சென்று இருப்பேன் என சொல்ல, ஆனால் பாக்கியா உனக்கு வேலை இருக்கும் அதனால் தான் கூப்பிடவில்லை என சொல்கிறார். பின் எழில் பேங்கில் என்ன எல்லாம் கேட்டார்கள் என கேட்க, பாக்கியா அவங்க கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது என சொல்கிறார். பின் கோபியின் அடையாள அட்டை கேட்பதாக சொல்ல, ஈஸ்வரி அப்படி என்றால் லோன் எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!