விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் இருந்து ஹீரோ அர்னவ் விலகல்? வெளியான விளக்கம்!
விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் அர்னவ், தற்போது குடும்ப பிரச்சனையால் சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக களமிறங்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் மாற்றம்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், குறிப்பிட்ட சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடிகர் அர்னவ் நடித்து வந்தார். பலரின் மனம் கவர்ந்த இந்த சீரியலில் அர்னவ் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்ற நிலை தற்போது இருக்கிறது. இந்நிலையில் அர்னவ் அவருடைய மனைவி திவ்யா உடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Follow our Instagram for more Latest Updates
இன்னும் அவருக்கு பெயில் கிடைக்காமல் இருக்கும் நிலையில், தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இதற்கு முன்னதாக வெளியான செய்தியில் நடிகர் திலீப் செட்டி, செல்லம்மா சீரியலில் ஹீரோவாக களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது . ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது வரை செல்லம்மா சீரியலில் அர்னவ் தான் நடிப்பார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
மேலும் இன்று நடிகர் அர்னவ் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதில் அவருக்கு பெயில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கிடைக்காமல் இருந்தால், அவருக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகர் யார் என சீரியல் குழு முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர் யார் என்பது குறித்து சீரியல் குழு வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. எப்படியோ கூடிய விரைவில் செல்லம்மா சீரியலில் தொடர்ந்து யார் நடிப்பார் என்ற முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.