போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் – இன்றைய எபிசோட்!

0
போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் - இன்றைய எபிசோட்!
போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் - இன்றைய எபிசோட்!
போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற கதிர் முல்லை, லோனை வசூலித்த சந்தோஷத்தில் கண்ணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிரும் சமையல் போட்டிக்கு முருகனிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பின் முல்லை கதிரை சமாதானம் செய்து போட்டியில் கலந்து கொள்ள சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் அவருடைய வேலைகளை முடித்ததை நினைத்து மேனேஜர் ஆச்சர்யப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் சமையல் போட்டிக்கு செல்ல அப்போது முருகன் வருகிறார். எங்கே கிளம்பிடீங்க என கேட்க, என் தோழியின் குழந்தைக்கு பிறந்தநாள் என பொய் சொல்லி முல்லை சமாளிக்கிறார். முருகன் நீங்க சென்றுவாருங்கள் என சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் பற்றி ஜீவா கேட்க, மீனா வந்து தேவை இல்லாத செலவு என்பது போல பேசுகிறார். பின் தனம் அவளை பற்றி பேசினால் உனக்கு என்ன என கேட்க, ஐஸ்வர்யா அவங்க கூட எப்படி தான் இருக்கீங்களோ என சொல்லி கிண்டல் செய்கிறார். பின் மூர்த்தி வந்து தனத்திடம் பணம் கேட்க, தனம் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார்.

மூர்த்தி பத்திரப்பதிவு எல்லாம் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜீவாவிடம் சொல்கிறார். மூர்த்தி எல்லாம் சரியாக ஜீவாவை பார்க்க சொல்ல, மீனா அதெல்லாம் ஜீவா பார்த்துக் கொள்வான் என மீனா சொல்கிறார். மறுபக்கம் முல்லை கதிர் போட்டி நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். கதிர் இடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார். கதிர் எதுவும் சரியாக வராது என சொல்ல, ஆனால் முல்லை கட்டாயப்படுத்தி உள்ளே வர சொல்கிறார். ஆனால் கதிர் வீட்டிற்கு போகலாம் என சொல்ல, முல்லை சும்மா இருங்க என சொல்கிறார். பின் இருவரும் சென்று பெயர் கொடுக்கின்றனர்.

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதி – இன்று (அக். 26) முதல் அமல்!

பின் முல்லை பதிவு செய்துவிட்டு இருக்க, இன்னைக்கு போட்டியில் நாம தான் ஜெயிக்க போகிறோம் என சொல்கிறார். பின் போட்டிக்கு எல்லாம் தயாராகி கொண்டிருக்க, கதிர் அவர்களை பார்த்து கொஞ்சம் தயக்கப்படுகிறார். அதன் பின் போட்டி தொடங்குகிறது. மறுபக்கம் கண்ணன் ஆபிஸ் வர மேடம் வந்துட்டாங்களா என கேட்கிறார். ஆனால் மேடம் வர லேட் ஆகிறது. பின் கண்ணன் சந்தோசமாக வணக்கம் சொல்ல, அந்த மேடம் கோவமாக செல்கிறார். பின் கண்ணன் அவரை சந்தித்து பாட்டியிடம் பணத்தை வாங்கிவிட்டேன் என சொல்லி பணத்தை கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!