Vijay TV Bigg Boss Season 5 | நிலம் நாணயத்தை வைத்து ஆட்சியை கைப்பற்றிய நிரூப் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 29வது நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகள் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நிரூப்பின் நிலம் நாணயத்தை பயன்படுத்தி வீட்டில் ஆட்சி செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் நான்கு வாரம் முடிவடைந்துள்ளது. முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து, இரண்டாவது வாரத்தில் நாதியா சங், மூன்றாவது வாரத்தில் அபிஷேக் ராஜா, நான்காவது வாரத்தில் சின்னப் பொண்ணு ஆகியோர் வெளியேறினார்கள். தற்போது 14 போட்டியாளர்களுடன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த நாணயங்களை வைத்திருக்கும் போட்டியாளர்கள் வீட்டை ஆட்சி செய்ய உரிமை வழங்கப்படும்.
பாரதியை விவாகரத்து செய்வதற்கு கண்ணம்மாவிடம் பேரம் பேசும் சித்தி – விறுவிறுப்பாகும் கதைக்களம்!
அதே போல கடந்த வாரம் நெருப்பு நாணயம் வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்திருந்த இசைவாணி வீட்டை ஆட்சி செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோவில் நிரூப் வைத்திருக்கும் நெருப்பு நாணயத்தை பயன்படுத்த பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக வீட்டில் இருக்கும் பெண்களில் ஒருவரை தேர்வு செய்யலாம் என பிக்பாஸ் சொல்ல, நிரூப் அக்ஷயாவை தேர்வு செய்கிறார்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் இருந்து விலகும் வில்லி அனு? காரணம் இது தானாம்!
ஆனால் அது பிடிக்காத அக்ஷரா எனக்கு இதில் கலந்து கொள்ள விருப்பமில்லை. அதற்கான தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இல்லையென்றால் வீட்டில் இருந்து வெளியேற்றினாலும் எனக்கு பிரச்சனை இல்லை என சொல்ல, இதை தான் வந்ததில் இருந்து இவங்க சொல்லிக் கொண்டு இருக்காங்க என சொல்ல, தீபாவளி சிறப்பு சண்டைகள் உங்களுக்காக என ராஜு நகைச்சுவையாக பேசுகிறார். உடனே போட்டியாளர்கள் அதை பார்த்து சிரிக்கின்றனர்.