கண்ணம்மாவிடம் தாத்தா பாட்டி பற்றி கேட்ட லட்சுமி, பாரதியை உசுப்பேத்த வடிவின் மாஸ்டர் பிளான் – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவிடம் தாத்தா பாட்டி பற்றி கேட்ட லட்சுமி, பாரதியை உசுப்பேத்த வடிவின் மாஸ்டர் பிளான் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிடம் தாத்தா பாட்டி பற்றி கேட்ட லட்சுமி, பாரதியை உசுப்பேத்த வடிவின் மாஸ்டர் பிளான் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவிடம் தாத்தா பாட்டி பற்றி கேட்ட லட்சுமி, பாரதியை உசுப்பேத்த வடிவின் மாஸ்டர் பிளான் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி நாம என்ன பரம்பரை என கண்ணம்மாவிடம் கேட்கிறார். பின் பாரதி கண்ணம்மாவை சேர்த்துவைக்க வடிவு திட்டம் போடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் , கண்ணம்மா லட்சுமி ஹேமாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க அப்போது லட்சுமி நான் என்ன பரம்பரை என கேட்கிறார். ஏன் கேக்குற லட்சுமி என கண்ணம்மா கேட்க, ஹேமா சௌந்தர்யா வேணு பரம்பரை என்று சொல்வாளாம் நான் எந்த பரம்பரை என் பாட்டி தாத்தா யாரு என கேட்கிறார். ஹேமா இப்படி எல்லாம் கேட்கலாமா என கோவப்பட, எனக்கு ஹேமா கேட்டதும் எனக்கு அழுகையாக வந்தது. அதனால் அகில் அங்கிள் நீயும் சௌந்தர்யா வேணு பரம்பரை என சொல்லு என்று சொன்னாரு.

TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம், தேர்வு மாதிரி வெளியீடு!

நான் அப்படி சொல்லலாமா என கேட்க, பெரியவர்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும், நீ அவங்களை பாட்டி தாத்தா என்று தான கூப்பிடுகிறாய் அப்பறம் என்ன என கேட்கிறார். பின் பாரதி வீட்டிற்கு வர பாட்டி ஒருவர் வழியை மறைத்து நீ மருத்துவம் பார்த்ததால் எனக்கு உடம்பு சரியாகிவிட்டது என அன்பளிப்பாக மல்லிகை பூவை கொடுக்கிறார். பாரதி வேண்டாம் என சொல்ல, கண்ணம்மாவிற்கு கொண்டு சென்று கொடு என சொல்கிறார். பாரதி கண்ணம்மா என்ன நினைப்பாள் என தெரியாமல் பாரதி வீட்டிற்குள் வந்து பூவை வைத்துவிட்டு உள்ளே செல்கிறார்.

அந்த நேரம் வந்த வடிவுக்கரசி வீட்டிற்குள் பூ இருப்பதை பார்த்து கண்ணம்மாவை கூப்பிடுகிறார். உன் புருஷன் உனக்காக ஆசையாக வாங்கி கொண்டு வந்திருக்கான் என சொல்ல, கண்ணம்மா அதெல்லாம் இருக்காது என சொல்கிறார் உனக்கு தான் வாங்கி கொண்டு வந்திருக்கார் என அதை தலையில் வைத்து விடுகிறார். பின் பாரதி வந்து பார்க்க கண்ணம்மா தலைநிறைய மல்லிகை பூ உடன் இருக்கிறார். எனக்கு வாங்கி கொடுத்தது ரொம்ப சந்தோசம் என கண்ணம்மா சொல்ல நான் உனக்கு வாங்கவில்லை என பாரதி சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை சித்ரா இடத்தில் காவ்யா – ஒரு வருடம் நிறைவு!

அஞ்சலி குழந்தையை பார்த்து கொண்டிருக்க, குழந்தை பசியால் அழுகிறது உடனே அஞ்சலி பாட்டிலில் பால் கொடுக்க அகில் வந்து பார்த்து என்ன செய்கிறாய் என கேட்கிறார். பிறந்து 2 வாரம் கூட ஆகவில்லை அதற்குள் பாட்டிலில் பால் கொடுக்கலாமா என கேட்க அஞ்சலி டாக்டர் தான் அப்படி கொடுக்க சொன்னதாக சொல்கிறார். அகில் அதை நம்பிவிடுகிறார். பாரதி கண்ணம்மா வீட்டில் சாப்பாடு இன்னும் செய்யவில்லை என கோவத்தில் இருக்கிறார். அந்த நேரம் கண்ணம்மா வர எங்கே போன என்று கேட்கிறார்.

இன்னும் எதுவும் சமைக்கவில்லை என பாரதி கேட்க, இன்னைக்கு நான் சமைக்கவில்லை வடிவு அக்கா சமைத்து தரேன் என சொன்னார்கள் என்று சொல்கிறார். வடிவுக்கரசி சமைத்து கொண்டு வந்து கொடுக்க அது எல்லாமே முருங்கைக்காய்யில் செய்ததாக இருக்கிறது. பாரதி அதை நன்றாக சாப்பிடுகிறார். அருமையாக இருக்கிறது என சொல்லி சாப்பிடுகிறார். கண்ணம்மா கொஞ்சமாக சாப்பிடுங்க என சொல்ல பாரதி நான் ஒரு டாக்டர் எனக்கு எப்படி சாப்பிட வேண்டும் என தெரியும் என்று சொல்கிறார். பாரதி எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்துவிடுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!