‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை சித்ரா இடத்தில் காவ்யா – ஒரு வருடம் நிறைவு!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சித்ரா எதிர்ப்பாராத விதமாக இறந்து விட்டதால் அவருக்கு பதில் காவ்யா நடிக்க வந்து 1 வருடம் ஆகி விட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
சித்துவின் இழப்பு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி அன்று எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து இறந்து விட்டார். சித்ராவின் இழப்பு என்பது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாததாக அமைந்தது. தனது விடா முயற்சியின் காரணமாக பெரிய அளவில் சாதித்து முன்னேறியவர். தான் வாழ நினைத்த வாழ்க்கை அமைய இருக்கும் நேரத்தில் அவரின் தற்கொலை முடிவு குறித்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா யார் தெரியுமா? சின்னத்திரையில் சாதித்த கதை!
இதற்கு முன்னதாக பல நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பல்வேறு வேடங்களில் சித்து நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் அவரை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. இதனால் அவர் அடைந்த புகழின் அளவு என்பது யாராலும் அளவிட முடியாது. அந்த அளவிற்கு பெயரை சம்பாதித்து விட்டார். சித்துவிற்கு பிறகு அவரது முல்லை வேடத்தை யாராலும் செய்ய முடியாது என்றும், அவரை தவிர வேறு யாராலும் முல்லையாக இந்த அளவிற்கு நடிக்க முடியாது என்றும், அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி வந்தனர்.
நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்நிலையில், சித்துவின் மறைவிற்கு பிறகு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி முல்லையாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வரை முல்லையாக சித்து தான் நடித்து வந்தார். அதன் பிறகு வந்த எபிசோடுகளில் காவியா அறிமுகம் ஆனார். இந்நிலையில், முல்லையாக சித்து விடை பெற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைந்து விட்டது. இதனை ரசிகர்கள் தற்போது நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரின் நினைவை பகிர்ந்து வருகின்றனர்.