விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த சிக்கல்? – போலீசில் புகார்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி ராதிகாவுடன் சேர்வதர்கு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும், உண்மைகள் தெரிய வரும் போது பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளுடனும் தொடர் நகர்கிறது. தற்போது மிகவும் பரபரப்பாக செல்லும் சீரியலில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் சிக்கல்:
பாக்கியலட்சுமி தொடரில் சமீப காலமாக குடும்பத்தில் ஒரே அழுகையும் ,சண்டையும் மட்டுமே காட்டப்பட்டதை தொடர்ந்து தற்போது விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யங்களும் நிறைந்த தொடராக பார்வையாளர்கள் ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெகுளித்தனமான மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியதை தொடர்ந்து தனது முன்னாள் காதலி ராதிகா வீட்டில் தங்கும் அளவுக்கு கோபி வந்துள்ளார். சிக்குவாரா? சிதைவரா? என்று நினைத்திருக்கும் வேலையில் எதிர் பாரத விதமாக செழியன் குறித்த காட்சிகள் வெளியானது.
கலர்ஸ் தமிழ் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் பற்றி ரட்சிதா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதில் செழியன் வாழ்க்கையை வெறுத்த ‘தேவ தாசன்’ போன்று நான் ஜெனியுடன் இனி வாழப் போவதில்லை அதனால் விவாகரத்து செய்து கொள்கிறேன் என்று கூற அதற்கு பாக்கியா கோபத்தில் பளார் என்று செழியன் கன்னத்தில் ஒரு அரை விட்டு விவாகரத்து செய்வது அவ்வளவு சுலபமா போச்சா? கல்யாணம் வாழ்க்கைனா அவ்ளோ கீழ்மட்டமா போச்சா? என்ற பாணியில் சரமாறியாக விட்டு விளாசுகிறார். அதை கண்டு அதிர்ச்சியில் மீள முடியாதவராக கோபி கதிகலங்கி நிற்கிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருந்து எழும்ப முடியாத கோபியின் அப்பா தற்போது ஓரளவு குணமாகி வருகிறார். அவருக்கு பிசியோதெரபி ஆக வந்தவர் மீது பாக்கியாவின் மகள் இனியாவுக்கு காதல் உண்டாகிறது. அதைக்குறித்து ஜெனி பாக்கியவிடம் சொல்ல அப்போது நடந்த விவகாரத்தில் பேசிய சில வசனங்கள் பிசியோதெரபிஸ்ட் பற்றியும், அந்த வேலையை குறித்து தரக்குறைவாக பேசியது போன்றும் உள்ளது என சீரியலின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.