மரண படுக்கையில் இருக்கும் ராமமூர்த்தி, திருந்துவாரா கோபி? “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வரும் எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இன்னும் திருந்தாமல் இருப்பதால் ராதிகாவிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும் என ராமமூர்த்தி தாத்தா நினைத்து வெளியே செல்கிறார். ஆனால் ராதிகா வீட்டை காலி செய்து சென்றுவிடுகிறார். அதனால் மனம் உடைந்த தாத்தாவிற்கு உடம்பு சரியில்லாமல் போக அவர் வருத்தப்பட்டு மரணத்தை தழுவுகிறார். அதனால் கோபி திருந்துவரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
பாக்யலக்ஷ்மி:
பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவை ஏமாற்ற கோபி எல்லா வழிகளிலும் வேலை செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய மகள் இனியாவிடம் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என சொல்ல இனியா விளையாட்டிற்கு சொல்வதாக நினைக்கிறார். ஆனால் கோபி உண்மையாகவே சொல்லி இருக்கிறார். அவர் பாக்கியாவை பிரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
மகளை மாறி மாறி வெறுப்பேற்றிய “பாக்கியலட்சுமி” சீரியல் ராதிகா – வைரலாகும் வீடியோ!
இந்த பிரிவை எப்படி குடும்பம் தாங்கும் என்பது பற்றி நினைக்காமல் கோபி செய்யும் காரியங்கள் ரசிகர்களை கோபமடைய செய்கிறது. கோபி திருந்திவிட்டார் என ராமமூர்த்தி நினைக்க அதெல்லாம் இல்லை என தெரிந்து அவர் ராதிகாவிடம் போட்டோவை காட்டி உண்மையை சொல்ல கிளம்புகிறார். ஆனால் அங்கே ராதிகா வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிடுகிறார். அதனால் தாத்தாவிற்கு முடியாமல் அங்கையே மயங்கி விழுகிறார்.
கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் இனியா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
தாத்தாவை வீட்டிற்கு அழைத்து வர எழில் என்ன நடந்தது என கேட்கிறார். ஆனால் தாத்தாவால் சொல்ல முடியாமல் இருக்கிறது. கோபியை நினைத்து தாத்தா மிகவும் மன உளைச்சலில் இருக்க போகிறார். அதனால் அவருக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார். மேலும் தாத்தாவின் இறப்பிற்கு கோபி தான் காரணம் என நினைத்து எழில் கோவமாக இருக்க கோபி இனியாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.