கோபியை கண்மூடித்தனமாக நம்பும் பாக்கியா, செல்வி எடுக்கும் முடிவு – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவை கோபி ஏமாற்றி வரும் நிலையில் ஆனால் பாக்கியா இப்போது வரை கோபியை நம்பாமல் இருக்கிறார். இந்நிலையில் பாக்கியா கோபி பற்றி தெரிந்து கொள்வாரா அல்லது கோபி கதாபாத்திரம் இன்னும் மோசமான முடிவுகளை எடுக்க இருக்கிறதா என்பது பற்றி அடுத்து வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை ராதிகாவும் பாக்கியாவும் நட்பாக இருந்த நிலையில் தற்போது நடந்த சம்பவத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனால் இனி கோபி மாட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருக்க போகிறார். அடுத்ததாக பாக்கியாவை போலீசார் கைது செய்ய ஆனால் பாக்கியா மீது தவறு எதுவும் இல்லை என வருகிறது. அதனால் எழில் கொடுத்த ஆதாரங்களின் படி போலீசார் பாக்கியாவை விடுதலை செய்கின்றனர்.
ExamsDaily Mobile App Download
பாக்கியாவின் இக்கட்டான சூழ்நிலையில் கோபி இல்லாமல் இருப்பதால் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கோவப்படுகின்றனர். ஆனால் பாக்கியாவை கோபி ஏமாற்றுவது செல்வியை தவிர யாருக்கும் தெரியாது. செல்விக்கு சந்தேகம் இருந்தாலும் பாக்கியா கோபி மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் அவர் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வர போகும் எபிசோடுகளில் செல்வி பேச்சை கேட்டு பாக்கியா நம்புவரா அல்லது இன்னும் கோபி பாக்கியாவை ஏமாற்ற போகிறாரா என்பது எல்லாம் பார்க்கலாம்.
மேலும் பாக்கியாவின் தொழிலை இனி செய்ய கூடாது என கோபி சொல்லி இருப்பதால் எழில் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்க போகிறார். அதனால் இனி பாக்கியா தொடருவரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி சுவாரஸ்யமான காட்சிகளுடன் கதை செல்ல இருப்பதால் பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் பெரிய மாற்றத்தை சந்திக்க இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் கோபி எப்போது மாட்டிக் கொள்வார் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.