வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய மூர்த்தி பல இடங்களில் கடன் வாங்கி பணம் ஏற்பாடு செய்கிறார். அது மீனாவிற்கு பிடிக்காமல் இருக்க கணக்கு வழக்குகளை கண்ணனிடம் சொல்லாமல் இருப்பதை நினைத்து ஐஸ்வர்யா வருத்தப்படுகிறார். அதனால் அவர் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் இனி வர போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு நடுவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். பல இடங்களில் மனகசப்புகள் வந்தாலும் அதை குடும்பத்துடன் பேசி சரி செய்து கொண்டிருக்கின்றனர். அதனால் குடும்பம் தற்போது வரை பிரியாமல் இருக்கிறது. இந்நிலையில் முல்லை குழந்தை இல்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தப்பட அதை நினைத்து மூர்த்தியும் தனமும் வருத்தப்படுகின்றனர்.
தன்னுடைய சந்தோஷமான தருணத்தை வீடியோவாக வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா – ரசிகர்கள் வாழ்த்து!
அதனால் முல்லைக்கு எப்படியாவது டிரீட்மென்ட் பார்க்க வேண்டும் என்பதால் பல இடங்களில் கடன் வாங்கி பணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அதை நினைத்து முல்லை சந்தோசமாக இருந்தாலும் கதிர் தன்னால் குடும்பத்திற்கு ஏகப்பட்ட கஷ்டம் என்பதால் அவர் வருத்தப்படுகிறார். இந்த விஷயம் மீனாவிற்கு ஐஸ்வர்யாவிற்கும் பிடிக்காமல் இருக்கிறது. மீனா பல இடங்களில் முல்லைக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என கேட்டிருக்கிறார். ஆனால் அமைதியாக இருந்த ஐஸ்வர்யா வரவு செலவில் கண்ணன் இல்லை என்பதால் வருத்தப்படுகிறார்.
ExamsDaily Mobile App Download
நீயும் இந்த குடும்பத்தில் ஒருவர் தான் அதனால் உன்னிடம் சொல்லி இருக்கலாம் என ஐஸ்வர்யா சொல்கிறார். அதனால் வருத்தப்பட்ட ஐஸ்வர்யா இவ்வளவு வேலை செய்தும் மரியாதை கிடைக்காமல் இருப்பதால் தனி குடித்தனம் செல்ல முடிவு செய்கிறார். அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் இருக்கிறது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்ல குடும்பத்தில் விரிசல் ஏற்பட இருக்கிறது.