எழிலுக்காக ராதிகாவை விட்டு விலகும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
எழிலுக்காக ராதிகாவை விட்டு விலகும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
எழிலுக்காக ராதிகாவை விட்டு விலகும் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
எழிலுக்காக ராதிகாவை விட்டு விலகும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் திடீர் திருப்பங்களையும், பல ட்விஸ்டுகளையும் காட்டி வரும் நிலையில் இன்று நடக்க உள்ள எபிசோடில் எழில் சொன்னதை கேட்ட கோபி ஒரு கணம் மனசு நொறுங்கியவரானார். இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்று இனியா அவளுடைய தோழியின் அப்பா, அம்மா விவாகரத்து செய்தது குறித்து பாக்கியாவிடம் கூறினார். உடனே பாக்கியா அப்போ உன் பிரென்ட் இப்ப யாரு கூட இருக்கா? என் கேட்டதுக்கு அவ அப்பா கூட இருக்கா. நாளைக்கு உனக்கும் டாடிக்கும் டைவர்ஸ் ஆனா கூட நான் அப்பா கூடத்தான் இருப்பேன் என்று சொன்னதை கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைந்தவளாக அவளை திட்டிவிட்டு, மனதுக்குள் இப்படி ஒருபோதும் நடக்கக்கூடாது என நினைத்து கொள்கிறாள்.

சரஸ்வதி மீது கோவமாக இருக்கும் கோதை, திடீரென மாற்றி பேசிய சரஸ்வதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதன் பின்னர் மறுநாள் காலையில் கோபி வெளியே கிளம்ப அந்த நேரத்தில் எழில் பைக்கில் வேகமாக உள்ளே வருகிறான். இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்து விட்டு கோபி எழிலை திட்டி விட்டு வெளியே சென்று விடுகிறான். பிறகு எழில் தனது பட வேலைகளை முடிந்து விட்டதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல, அப்பாவிடம் இதை சொல்லுமாறு கூறி அனுப்பி வைக்கிறார் பாக்யா. அவனும் கோபியை பார்க்க செல்ல பதற்றமடைந்தவனாக கோபி எழிலை பார்க்கிறான். அதற்கு எழில் பயப்படாதீங்க என் படத்தோட வேலைகள் முடிந்து விட்டது.

நாளைக்கு என் வாழ்க்கையில முக்கியமான நாள் பிரீவியூ ஷோ நடக்க இருக்கு அதுக்கு எல்லாரும் வருவாங்க ஆனா நீங்க தயவு செய்து வந்துறாதீங்க என்று சொல்கிறான். இதை கேட்கும் போது உங்களுக்கு கஷ்டமா இருக்கா? இப்படி தான் எனக்கும் இருக்கும் நீங்க பண்ற காரியங்கள் என்று குத்தி காட்டுகிறான். மேலும், எப்போதும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி உங்களுக்கு பிடிச்ச வேலையை செய்வீங்கள்ள அதே மாதிரி இந்த விஷயத்துக்கும் ஏதாவது காரணம் சொல்லிடுங்க என்று சொல்லி நகர்கிறான்.

ராதிகா வீட்டில் இருந்து எழில் சொன்னதை நினைத்து கோபி வருந்துகிறான். அதை கண்ட ராதிகா என்னாச்சு ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்க கோபி நடந்த அனைத்தையும் சொல்லி இதெற்கெல்லாம் காரணம் என்னோட ஃபர்ஸ்ட் வொய்ஃப் தான் அதனால எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல என்று சொல்கிறான். அதற்க்கு ராதிகாவும் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு டைவர்ஸ் கிடைக்க அதுக்கு அப்புறம் இங்க வந்துடுங்க என சொல்ல, கோபியும் அதைப்பற்றி யோசிப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!