விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – திருமணம் பற்றி கேட்ட ராதிகா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், சென்ற வாரம் முழுவதும் இனியாவின் பள்ளியில் நடந்த பிரச்சனை பற்றியே கதை சென்றது. தற்போது மீண்டும் ராதிகா கோபியின் காதல் கதை தொடங்கி விட்டது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கஷ்டங்களை மையமாக கொண்ட கதை உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பாக்கியாவை மையமாக வைத்து அவரது குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்களை பற்றியதாக இருக்கிறது. ஆனால் அந்த சீரியலில் அவ்வப்போது சமூக விழிப்புணர்வு கருத்துக்களும் கொண்டு வரப்படும். அதன் படி சென்ற வாரம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களால் கொடுக்கப்படும் பாலியல் தொல்லை பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதை சென்றது.
அதில் பெண் குழந்தையின் அம்மாவான பாக்கியா ஒரு பெரிய புரட்சி செய்தார். அதனை தொடர்ந்து இனியா மீது கோபி வைத்திருக்கும் அக்கறை பாசம் பற்றி காட்டப்பட்டது. இன்றைய எபிசோடில் மீண்டும் ராதிகா கோபியின் காதல் காட்சிகள் காட்டப்பட இருக்கிறது. அதன் படி கோபி நீண்ட நாளுக்கு பின் ராதிகாவை பார்க்க வருகிறார். அப்போது ராதிகாவின் விவாகரத்து கேஸ் பற்றி பேசுகின்றனர். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என கோபி சொல்ல, ராதிகாவின் அம்மா நீங்க எப்போ உங்களது குடும்பத்தை விட்டு வரப்போறீங்க என கேட்கிறார்.
பாரதியால் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா, அனைத்தும் வெண்பாவின் கனவா? ரசிகர்கள் ஷாக்!
வருவேன், வருவேன் சீக்கிரமாக என கோபி சொல்லி சமாளிக்க ராதிகாவும் சீக்கிரமாக விவாகரத்து வாங்க சொல்கிறார். என்ன நம்பிக்கை இல்லாதது போல பேசுகிராய் என கோபி ராதிகாவிடம் கேட்க, ஆமாம் இதுவரை திருமண வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டது போதும் இனிமேல் அமையும் வாழ்க்கை எனக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ராதிகா சொல்ல, நான் நிச்சயம் குடும்பத்தை விட்டு வருவேன் என கோபி உறுதி கொடுக்கிறார். ஏற்கனவே கோபி மீது அவரது அப்பா ராமமூர்த்தி கோவமாக இருக்கிறார். இந்த நேரத்தில் கோபி இப்படி முடிவு செய்திருப்பது தெரிந்தால் என்ன ஆகும் என பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.