விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகா வீட்டில் தங்கும் கோபி!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ராதிகா வீட்டில் தங்கும் கோபி!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ராதிகா வீட்டில் தங்கும் கோபி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகா வீட்டில் தங்கும் கோபி!

இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் பாக்கிய லட்சுமி. தற்போது விறுவிறுப்புடனும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளுடன் தொடர் நகர்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வரவிருக்கும் நிகழ்வுகளைப் பார்ப்போம்.

இன்றைய எபிசோட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பத்தில் அனைத்து வீட்டு இல்லத்தரசிகளும் ரசித்து பார்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் அடுத்து என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வரக்கூடிய எல்லா எபிசோடுகளிளும் குடும்பத்தில் சண்டையும், அழுகையும் மட்டுமே காட்டப்பட்டு வந்த நிலையில் சீரியல் சூடுபிடித்துள்ளது. அதாவது கோபி கில்லாடி தனம் செய்து பாக்கியாவிடம் தப்பித்து வரும் கட்சிகளுக்கு ‘நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா ‘ என்ற பாணியில் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் ஒரு பக்கம் பாக்கியா ரசிகர்கள் விரைவில் கோபி சிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள எபிசோட்டில் பாக்கிய சமையல் செய்யும் இடத்திற்கு ஈஸ்வரி, ராமமூர்த்தியை அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை கண்ட பாக்கியா சந்தோஷமடைந்து வாங்க என்று அன்புடன் அழைக்கிறார். அவளது சமையல் வேலைக்கு ஈஸ்வரியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். அப்போது மாமியாரிடம் பாக்கியா அவர் வந்தாரா ? என்ற கேள்வியை வைக்க அதற்கு ஈஸ்வரி அவன் போன் பேசிக்கொண்டே கீழ இறங்கி வந்தான் அடுத்து எங்க போனான் தெரியல என்று கூறுகிறார்.

அதற்கு பாக்கியா நான் போனில் அவருக்கு பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை மேலும் உடம்புக்கு முடியலன்னு சொல்லிட்டு இருந்தாங்கனு வருத்தப்பட்டாள். இதற்கிடையில் செழியன், ஜெனியின் அப்பா, அம்மாவை பார்த்து பேசுகிறான். அவன் என்னை விட என் வீட்ல உள்ளவங்க கூட நெருக்கமா இருக்கா என சொல்லி வருத்தப்படுகிறான். அதை தொடர்ந்து கோபி ராதிகா வீட்டிலிருந்து அவரது வீட்டுக்கு கிளம்பும் போது ராதிகா மகள் மயூ இங்கயே இருங்க என சொல்கிறாள். அதற்கு ராதிகாவும் ஆமா இங்க எங்க கூட இருங்க, அங்க போய் என்ன பண்ண போறீங்க என சொல்ல, கோபியும் சம்மதித்து அங்கேயே தங்கி விடுகிறார்.

இந்தப் பக்கம் சமையல் முடித்துவிட்டு வீட்டுக்கு வரும் பாக்யா கோபி பற்றி இனியா, ஜெனியிடம் விசாரிக்கிறாள். அதற்கு அவர்கள் அவர் நல்லாத்தான் இருக்காரு என சொல்ல பாக்கியாவும் நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லி மாடிக்கு ஏறுவதற்கு திரும்பிய கணம் அவர் இங்கே இல்லை என இருவரும் சொன்னார்கள். அதை கேட்ட பாக்கியா அதிர்ச்சியில் ஏன் இப்படி செய்கிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே போன் மேல போன் செய்கிறார். ஆனால் கோபி போனை சைலன்ட்ல போட்டுவிட்டு தூங்கி விடுகிறான். மிகுந்த வருத்தத்தில் நடுராத்திரி வரை கோபிக்காக காத்து கொண்டு இருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!