ராதிகாவிடம் நெருக்கமாக இருக்க நினைக்கும் கோபி.. குறுக்கே வந்த இனியா- “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபி வீட்டில் இருப்பதால் கோபிக்கும் ராதிகாவிற்கும் இடையே நெருக்கம் குறைந்து விடுகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கோபி வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்ட நிலையில், இனியாவும் பாக்கியாவை புரிந்து கொள்ளாமல் கோபி வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அதனால் கோபி ராதிகா இடையே நெருக்கம் குறைந்துவிடுகிறது. இந்நிலையில் புதிதாக கல்யாணம் செய்துள்ள கோபி ராதிகா அன்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி ராதிகாவிடம் மயூரா தூங்கிவிட்டாளா என கேட்டு நெருக்கமாக வருகிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவின் கையை பிடித்து முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பார்த்து இனியா வந்துவிட, ராதிகா அவளை பார்த்துவிட்டு கோபியை பிடித்து தள்ளிவிடுகிறார். உடனே கோபி கீழே விழுந்துவிட, அவரால் எழுந்திருக்க கூட முடியவில்லை. அப்போது இனியா வந்து பார்த்துவிட்டு என்னாச்சு டாடி என கேட்க, கோபி இனியாவிடம் போன் கீழே விழுந்துவிட்டது அதை எடுக்க முயற்சி செய்வதாக சொல்லி சமாளிக்கிறார். பின் கோபி ராதிகாவை ஏக்கத்துடன் பார்க்க, ராமமூர்த்தி கோபியை சந்தேகத்துடன் பார்க்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.